ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பமும் கூடி 'சதி' ஆலோசனை- 'தப்பி ஓட'முயன்ற பசில் ஜனாதிபதி தேர்தலில் போட்டி?
கொழும்பு: இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சே குடும்பத்தின் பசில் ராஜபக்சே போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அக்டோபர் 10-ந் தேதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் போனால் இலங்கை மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்கி போராட்டத்தை நடத்தக் கூடும் என்கிற அச்சமும் நிலவுகிறது.

இந்த நிலையில் துக்க நிகழ்வு ஒன்றுக்காக மகிந்த ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த அத்தனை 'தலைகளும்' ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாம்.
இந்த விவாதங்களின் முடிவில்தான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக அதிபர் தேர்தலில் பசில் ராஜபக்சேவை களமிறக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இலங்கை அரசியலில் ராஜபக்சே குடும்பத்தினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய, பிரதமராக மகிந்த ராஜபக்சேக்கள் பதவி வகித்த காலம் இருந்தது. ஆனால் இலங்கை திவாலானதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த போது கோத்தபாய, மகிந்த ராஜபக்சே உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டே தப்பி ஓடினர். தங்களது பதவிகளையும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது தீவிர அரசியலில் ராஜபக்சேக்கள் ஒதுங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் ராஜபக்சே குடும்பத்தினர் ஒன்று கூடி சதி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில்தான் பசில் ராஜபக்சேவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளனராம்.
இதே பசில் ராஜபக்சேதான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயன்றார். அப்போது விமான நிலையத்தில் போராட்டக்காரர்களால் பசில் ராஜபக்சே சுற்றி வளைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதாவது பசில் ராஜபக்சே அமெரிக்கா குடியுரிமை பெற்றவராக இருந்ததால் இலங்கையை விட்டு தப்பி ஓட முயன்றார். அப்படியான பசில் ராஜபக்சேவையே இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அதிபர் வேட்பாளராக நிறுத்தலாம் என ராஜபக்சே குடும்பம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications