லெபனான்.. 7 வருடம் முன் விளையாடிய விதி.. ரஷ்ய பிஸ்னஸ்மேன் மீது வலுக்கும் சந்தேகம்.. சிக்கும் தலைகள்!
பெய்ரூட்: லெபனானில் நடந்த பெய்ரூட் கிடங்கு வெடிப்பு காரணமாக உலக நாடுகளின் கவனம் ரஷ்யா மீதும், சிஐஏ இதில் வைத்து இருக்கும் புதிய கோணம் மீதும் திரும்பி உள்ளது.
Recommended Video
லெபனான் வெடிப்பு காரணமாக மொத்தமாக 137 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர். 4500 பேர் வரை மிக மோசமாக காயம் அடைந்துள்ளனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து உள்ளனர்.
இன்னொரு பக்கம் அங்கு 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. லெபனானை உடைத்து போட்ட கிடங்கு வெடிப்புக்கு பின் நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.

லெபனான் மோதல்
இந்த நிலையில் லெபனானில் நடத்த பெய்ரூட் கிடங்கு வெடிப்பு காரணமாக உலக நாடுகளின் கவனம் ரஷ்யா மீதும், சிஐஏ இதில் வைத்து இருக்கும் புதிய கோணம் மீதும் திரும்பி உள்ளது. இதில் ரஷ்யா மீது சந்தேகம் உருவாவதற்கு காரணம், அந்த பெய்ரூட் கிடங்கில் வெடித்த அம்மோனியம் நைட்ரேட் முழுக்க முழுக்க ரஷ்யாவிற்கு சொந்தமானது ஆகும். ரஷ்யாவின் தொழிலதிபர் ஈகோர் கிரேஷ்கின் என்பவருக்கு சொந்தமானது ஆகும்.

ரஷ்யா கப்பல்
கடந்த 2014ல் இவருக்கு சொந்தமான கப்பல்தான் அம்மோனியம் நைட்ரேட்டை ஏற்றிக்கொண்டு லெபனான் கடல் பகுதி அருகே வந்துள்ளது. அப்போது கப்பலில் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்று கூறி லெபனானில் இந்த கப்பலை நிறுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் லெபனான் சுங்கத்துறை அதிகாரிகள், அந்த அம்மோனியம் நைட்ரேட்டை அபகரிக்க ஆசைப்பட்டு, அந்த கப்பலை திரும்பி செல்ல விடாமல் அங்கேயே முடக்கி இருக்கிறார்கள்.

சந்தேகம் வந்தது
இதில் ரஷ்யா மீது சந்தேகம் வர பின் வரும் காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த கப்பல் உண்மையில் கோளாறுக்கு உள்ளானதா? அல்லது அம்மோனியம் நைட்ரேட்டை லெபனான் கொண்டு வருவதற்காக ரஷ்யா சதித்திட்டம் தீட்டியதா என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது அம்மோனியம்நைட்ரேட்டை லெபனான் கொண்டு செல்ல வேண்டும் என்ற இப்படி பொய்யான காரணத்தை ரஷ்ய தொழில் அதிபர் கூறினாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

அம்மோனியம் நைட்ரேட் எப்படி
அதோடு இந்த அம்மோனியம் நைட்ரேட்டை திருப்பி கொடுத்த போதும் ரஷ்யா அதை வாங்க மறுத்துள்ளது. ரஷ்யாவின் தொழிலதிபர் ஈகோர் கிரேஷ்கின் நிறுவனம் திவாலாகிவிட்டது. இதனால் அந்த அம்மோனியம் நைட்ரேட்டை இடமாற்றம் செய்ய முடியாது என்று ரஷ்யா கூறியுள்ளது. இதனால் திட்டமிட்டு அந்த அம்மோனியம் நைட்ரேட் அங்கேயே முடக்கப்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.

சிஐஏ கேள்வி
இன்னொரு பக்கம் இதில் சிஐஏவும் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளது. அதன்படி இந்த வெடிப்பில் முதலில் வெடித்தது மட்டும்தான் அம்மோனியம் நைட்ரேட். இரண்டாவது வெடித்தது அம்மோனியம் நைட்ரேட் கிடையாது. அங்கு எதோ குண்டு இருந்துள்ளது. அதுதான் இரண்டாவது முறை வெடித்து இருக்கிறது . அதனால்தான் அப்படி பெரிய வெடிப்பு நிகழ்ந்தது . இதை யாரோ திட்டமிட்டு செய்துள்ளனர்.

குண்டு சந்தேகம்
அந்த குண்டு வெடித்த போது பெரிய அளவில் சிவப்பு புகை வந்தது. அந்த சிவப்பு புகையின் அர்த்தம், அங்கு பெரிய குண்டு ஒன்று இருந்தது என்பதாகும், என்று சிஐஏ கூறியுள்ளது. 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் என்பது கிட்டத்தட்ட 1100 குண்டுகளை உருவாக்க முடியும். அந்த அளவிற்கு இந்த கெமிக்கல் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications