பெய்ரூட் வெடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு
லெபனான் தலைநகர் பெய்ரட்டில் போராட்டம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த வருடம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு குறித்து விசாரிக்கும் நீதிபதிக்கு எதிராக ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்பொல்லா மற்றும் அமல் ஆகிய குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லபெனீஸ் படைகள் என்னும் குழுக்களை சேர்ந்த கிறித்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் இதை லெபனீஸ் படை அமைப்பு மறுத்துள்ளது.
பீய்ரட் துறைமுகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 219 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு குறித்த விசாரணை பெறும் பதற்றத்துக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.
ஹெஸ்புல்லா மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள், அந்த நீதிபதி ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிபதிக்கு ஆதரவாகவுள்ளனர்.
பீய்ரட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பெரும் பகுதியான நகரம் சேதமடைந்துதத ஆனால் இதுவரை அந்த சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
- லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 70 பேர் பலி; 4000 பேர் காயம்
- லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: அந்த பகுதியில் இருந்த பிபிசி நிருபரின் அனுபவம் - விரிவான தகவல்கள்
இந்த துப்பாக்கிச்சூடு சமீப காலத்தில் லெபனானில் நடைபெற்ற மோசமான வன்முறையாகும்.
"தங்களின் சுயவிருப்பத்திற்காக நாட்டை பணையம் வைக்க யாரையும் அனுமதிக்க முடியாது" என லெபனானின் அதிபர் மைக்கேல் அவுன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெய்ரூட் குண்டு வெடிப்பு குறித்த விசாரணை அரசியல் சார்பாக உள்ளது என்று தெரிவித்தனர்.
அதேபோல இதை விசாரிக்கும் நீதிபதி தாரேக் பித்தாரை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
அந்த போராட்டத்தில் திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. ஷியா பிரிவு குழுவினரும் கிறித்தவ ஆயுததாரிகளும் மாறி மாறி சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது.
இந்த மோதல் பல நேரம் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடால் உள்ளூர் குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகளை விட்டுத் தப்பி ஓடினர்.
அருகாமையில் உள்ள பள்ளி ஒன்றில் குழந்தைகளை தரையில் அமர்ந்து பாதுகாக்க இருக்க ஆசிரியர்கள் தெரிவித்ததாக ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை மற்றும் ராணுவ செய்தி வட்டாரங்கள், இந்த சம்பவத்தில் சுடப்பட்டவர்கள் பலருக்கு தலையில் குண்டு பாய்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
ஹெஸ்பொல்லா மற்றும் அமல் குழுவினர் தங்களின் எதிர்த் தரப்பு குழுவான கிறித்தவ லெபனீஸ் படை மீது குற்றம் சுமத்தியுள்ளது. "லெபனீஸ் படையை சேர்ந்தவர்கள் வீதிகளிலும் வீட்டுக்கூரைகளிலும் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினர்" என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
லெபனீஸ் படைத் தலைவர் சமீர் கீகா இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் துப்பாக்கிதாரிகளை சாலையில் பார்க்க நேர்ந்தால் அவர்கள் சுடப்படுவர் என்று தெரிவித்துள்ளது.
நீதிபதி மீது புகார் தெரிவிப்பதால் பெய்ரட் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை தாமதமாகிறது என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும் நாட்டின் அரசியல் தலைமை மீது குற்றம் சுமத்துகின்றனர்
லெபனான் தலைநகர் பெய்ரட்டி துறைமுகத்தில் ஆறு வருடமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் பலர் உயிரிழந்தனர்.
அரசு அதிகாரிகளுக்கு இம்மாதிரியாக அதிகளவிலான அமோனியம் சேமித்து வைத்திருப்பது குறித்து தெரிந்தும் அதன் ஆபத்து குறித்து அறிந்தும் அதை அங்கிருந்து அப்புறப்படுத்த தவறிவிட்டனர்.
பிற செய்திகள்:
- உலகளவில் கணவர்களை காட்டிலும் மனைவிகள் குறைவாக பணம் ஈட்டுவது ஏன்? - வெளியான ஆய்வு
- கடைசி ஓவரில் கைமாறிய வெற்றி: கோப்பையை தவறவிட்ட டெல்லி அணி; சென்னையுடன் மோதும் கொல்கத்தா அணி
- எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி?
- மேனகா காந்தி தொடர்ந்த சாதாரண வழக்கு, இந்தியாவில் ஒரு முக்கிய வழக்கானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்














Click it and Unblock the Notifications