Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆபத்து".. எல்லாரும் அழிய போறாங்க.. 3ம் உலகபோர் வரும்.. காரணமே இந்த நாடுதான்.. பெண் சாமியார் கணிப்பு

3ம் உலகப்போர் விரைவில் நடக்கும் என்று கியூப பெண் ஜோதிடர் கணித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஹவானா: 3ம் உலகப்போர் விரைவில் நடக்க போவதாக, கியூப ஜோதிட பெண் ஒருவர் கணித்து சொன்ன தகவல், இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பாபா வங்கா பல்கேரியாவை சேர்ந்தவர்.. கண்பார்வையற்றவரும் கூட.. 85ம் வயதில் 1996-ம் வருடம் இறந்துவிட்டார்.. பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர் இப்போதுவரை மதிக்கப்படுகிறார்.

12 வயதில் பார்வையை இழந்தவுடனேயே உலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல துவங்கிவிட்டார்.

 நிஜங்கள் + கணிப்புகள்

நிஜங்கள் + கணிப்புகள்

கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர்.. இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் பலித்தும் உள்ளது.. அவைகளில் பல ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்தும் வருகின்றன. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர்தான் பதவியேற்பார், 2016-ல் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும், குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார், உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும், என பல விஷயங்களை கணித்து சொன்னார்.

 லிஸ்ட் போட்ட பாபா வாங்கா

லிஸ்ட் போட்ட பாபா வாங்கா

இவர் கணித்து விட்டு போன அத்தனையும் நடந்தது.. அதிகப்படியான டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையே குழப்பம் ஏற்படும் என்பது முதல், இந்த 2022ல் ஆஸ்திரேலியாவில், சீனாவின் தென் மாகாணங்களில் வெள்ளம் ஏற்படும் என்று கணித்து கூறியதும் பலித்துவிட்டது.. எனவே, ஒவ்வொரு வருடமும் பாபா வாங்கா சொல்லிய கணிப்புகள் மிகுந்த கவனத்துடன் கவனிக்கப்படும்.

 ஷாக்கடிக்கும் செய்தி

ஷாக்கடிக்கும் செய்தி

அந்தவகையில், இன்னொரு பெண் ஜோதிடர் தற்காலத்தில் பகீரை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.. இவர் கியூபாவை சேர்ந்தவர்.. அவர் பெயர் மோனி விடன்ட்டே.. இந்த பெண்மணி கணித்து சொன்னதும் பலமுறை நடந்துள்ளது.. அந்தவகையில், இப்போது, மூன்றாம் உலகப்போர் பற்றி தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார்... மூன்றாம் உலகப்போர் கண்டிப்பாக நடக்க போகிறதாம்.. 9 வருடங்களுக்கு இந்த போர் நீடிக்கும் என்றும், அதற்கு முக்கிய காரணமாக சீனாதான் இருக்கும் என்றும் உறுதியாக சொல்கிறார்.

 வேர்ல்டு வார்

வேர்ல்டு வார்

3ம் உலகப்போர் குறித்த பேச்சு, பல வருடங்களாகவே நடந்து வருகின்றன.. சில நாடுகளில் அதிருப்திகள் வெடித்து வந்த நிலையில், அவைகளுக்குள் போரையும் துவங்கிவிட்டன.. இப்படிப்பட்ட சூழலில், இந்த பெண் 3ம் உலகப்போர் குறித்து அறுதியிட்டு சொல்லி உள்ளதால், அது கலக்கத்தை தந்து வருகிறது.. ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும்நிலையில், இந்த நாடுகளுக்குள் போர் தொடர்ச்சியாக நடக்கும், இதனால் ஆபத்து என்றும் மோனி சொல்கிறார்..

Recommended Video

    China Spy Ship - எச்சரிக்கும் இந்தியா | Top 5 World News
     ஏவுகணைகள்

    ஏவுகணைகள்

    அதுமட்டுமல்ல, அமெரிக்காவுடன் நெருக்கமாக மற்றும் உலகத்தில் முன்னணி நாடாக இருக்கும் தென்கொரியா ஜப்பான், வியட்நாம், வடகொரியாவையும் தன்னோடு இணைத்துக் கொள்ள நினைக்கிறது என்று கூறியுள்ளார்... சீனா அமெரிக்காவை வீழ்த்தி வல்லரசாக மாறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும், அதன்காரணமாகவே உலகப் போரை தூண்டிவிடும்.. இந்த உலகப்போரில், குண்டுகளும், ஏவுகணைகளும் வந்துவிழும், உலகின் ஒவ்வொரு மனிதரும் அழியப் போகிறார்கள்" என்றும் கூறி மோனி உலக நாடுகளை கலங்கடித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+