ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டம்: அமெரிக்கா மாகாணங்களிடையே மோதலால் பரபரப்பு!!
நியூயார்க்: அமெரிக்காவின் இண்டியானா, அர்கான்சஸ் மாகாணங்களில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஓரினசேர்க்கையாளர்களும் இந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கடந்த வாரம் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் ஓரின சேர்க்கையாளர்களுக்கு தொழில் நிறுவனங்கள் சேவைகள் செய்ய தடை விதிக்கப்படுகிறது.
அதாவது உணவகங்கள், தங்குமிடங்களில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இம்மாகாணங்களில் அனுமதி மறுக்கப்படும். இதற்கு சில நிறுவனங்களும் ஓரினச்சேர்க்கையாளர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் இண்டியானாவை பின்பற்றி அர்கான்சஸ் மாகாணத்தில் நேற்று இதே போன்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நியூயார்க், வாசிங்டன் உள்ளிட்ட மாகாணங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும் இண்டியானா, அர்கான்சஸ் மாகாணங்களுக்கு அவசியமற்ற அரசு முறை பயணங்களை மேற்கொள்ளவும் இந்த மாகாணங்கள் தடை விதித்துள்ளன. இரு மாகாணங்களின் மேயர்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் வேறு சில மாகாணங்களும் இண்டியானா, அர்கான்சஸ் மாகாணங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications