சவுதியில் டிஎன்டிஜே நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்
தம்மாம்: சவுதி அரேபியாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தம்மாம் மண்டல கிளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
சவுதி அரேபியாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தம்மாம் மண்டல கிளை சார்பில் ஏப்ரல் 10ம் தேதி ரத்ததான முகாம் நடைபெற்றது. தம்மாமில் உள்ள சென்ட்ரல் மருத்துவமனையில் நடந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில் தங்களது சொந்த வேலைகளையும் துறந்து மனித நேயம் பேண காலை 9 மணி முதல் அனைத்து சமுதாய மக்களும் ரத்ததானம் செய்ய வரத் துவங்கினர்.

இந்த முகாமில் 85க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு, உடல் தகுதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் 81 யூனிட் ரத்ததானம் செய்தனர். இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் நடத்திய 41-வது ரத்த தான முகாமாகும். முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைகளுக்காகவும் ரத்ததானம் வழங்கப்பட்டு வருகின்றது.

அதிகமானோர் ரத்ததானம் செய்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து விருதுகளை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அது போல, சவுதி அரேபியாவிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரத்த தானம் செய்வதில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications