நாளை பொதுத்தேர்தல்.. இன்று பயங்கர குண்டு வெடிப்பு.. 25 பேர் பலி! பாகிஸ்தானில் பதற்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இன்று இரண்டு இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல் குண்டு வெடித்திருக்கிறது. இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

அதேபோல, இந்த பகுதியிலிருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ள கில்லா சைஃப் உல்லா மாவட்டத்தில் இரண்டாவது குண்டு வெடித்திருக்கிறது. இதில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக தேர்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். குண்டு வெடிப்பு நடந்தாலும் தேர்தல் உறுதியாக நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு உறுதியாக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications