திடீரென்று அதிகரிக்கும் கொரோனா பரவல்..தடுப்பூசி வழங்கி உதவ மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்
பிரேசிலியா: கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்துள்ளதால் உடனடியாக 20 லட்சம் கோவிஷீட்டு தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்குப் பின் பிரேசில் நாட்டில்தான் அதிக பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசில் நாட்டில் 54,247 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நேற்று ஒரே நாளில் சுமார் 1,044 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் அதிபர் கடிதம்
இந்நிலையில், பிரேசில் நாட்டிற்கு உடனடியாக கோவிஷீல்டு தடுப்பூசியை அளித்து உதவ வேண்டும் என்று ஜெய்ர் போல்சனாரோ பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவில் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு எவ்வித பாதிப்புமின்றி, சீரம் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகளின் 20 லட்சம் டோஸை பிரேசிலுக்கு உடனடியாக வழங்கி உதவ வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரேசிலில் கொரோனா தடுப்பூசிகள்
பிரேசில் நாட்டில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரேசில் ஜெய்ர் போல்சனாரோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரேசில் நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டிற்குத் தடுப்பூசி எப்படிக் கிடைக்கும்
ஒரு நாடு தனக்கு தேவையான தடுப்பூசிகளை இரண்டு வழிகளில் கொள்முதல் செய்து கொள்ளலாம். நேரடியாகத் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஆர்டர் அளிப்பதன் மூலம் கொள்முதல் செய்யலாம். இதன் மூலம் ஏற்கனவே பிரேசில் தனியார் மருத்துவமனை கூட்டமைப்பு பாரத் பயேடெக் நிறுவனத்திற்கு கோவாக்சின் தடுப்பூசி வேண்டி ஆர்டர் அளித்துள்ளது. அதேபோல ஒரு நாடு அதிகாரபூர்வமாக தடுப்பூசி தயாரிக்கும் நாட்டிற்கும் கோரிக்கை விடுக்கலாம். இதன்படியே தற்போது பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

திடீர் கடிதம் ஏன்
கொரோனா பரவலுக்கு எதிராகப் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏற்கனவே கடுமையான விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்படுகிறது. பிரேசில் ஏற்கனவே ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்காக ஆஸ்டர் ஜெனெகா நிறுவனத்திடம் ஆர்டர் அளித்திருந்தது. இருப்பினும், பிப்ரவரி மாதம் தொடக்கம் வரை 10 லட்சம் தடுப்பூசியை மட்டும் அளிக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்ததாலேயே இந்தியாவிடம் பிரேசில் தற்போது கோரிக்கைவிடுத்துள்ளது.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications