ஜாக்கெட்டுக்குள் பணத்தை வைப்பாங்க சரி.. இந்த பிரேசில் எம்பி எங்க வச்சார் பாருங்க.. கருமம்!
ரியோ டி ஜெனீரோ: பிரேசில் எம்பி ஒருவர் தனது புட்டத்தில் ரூபாய் நோட்டை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சமாகும். இதுவரை இங்கு 1.52 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 45 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.

பிரேசிலில் ரோரைமா வடக்கு மாகாணத்தின் செனட் உறுப்பினராக உள்ளவர் சிகோ ரோட்ரிகூஸ். இவர் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை சுரண்டுவது தொடர்பாக புகார்கள் எழுந்தன. இவர் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு நெருக்கமானவர்.
இவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது உள்ளாடை மற்றும் புட்டத்திற்குள்ளும் மறைத்து வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. 30 ஆயிரம் ரில்ஸ் அதாவது 5300 டாலர், இந்திய மதிப்பில் சுமார் 4.10 லட்சம் பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ரோட்ரிகூஸ் கூறுகையில் போலீஸார் அவர்களது கடமையைத்தான் செய்துள்ளார்கள். இந்த சோதனையானது விசாரணையின் ஒரு பகுதியாகும். மற்றபடி நான் எதையும் செய்யவில்லை என தெரிவித்தார். ஆனால் அவர் மறைத்து வைத்திருந்த பணம் குறித்து அவர் எந்த வித தகவலையும் தெரிவிக்கவில்லை.
அதே வேளையில் தனது அரசு ஊழல் அரசு என ஊடகங்கள் சித்தரிப்பதாக அதிபர் ஜெயிர் போல்சனேரோ குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications