உலக எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தும் 'பிரிக்ஸ்'.. இனி எல்லாம் இந்த நாடுகள்தான்! மாறும் சர்வதேச நிலைமை
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் புதியதாக 6 நாடுகள் இணைந்துள்ளன. இதன் மூலம் சர்வதேச எண்ணெய் உற்பத்தியில் 80% இனி பிரிக்ஸ் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள 'பிரிக்ஸ்' நாடுகளின் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த மாநாடு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்து வந்தது. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக இம்மாநாட்டில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, "உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும். உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும். இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. யுபிஐ தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.
சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வளர்ச்சி தெற்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று பேசியிருந்தார். இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் சுருக்கமாக கலந்துரையாடியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும், சீன அதிபர் ஜி ஜிங்பிங் கடைசியாக ஒன்றாக சந்தித்து பேசிக்கொண்டனர்.
ஆனால் அடுத்த மாதமே லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் அடுத்து வந்த காலகட்டங்களில் மத்திய அரசு சீனா விஷயத்தில் கறார் காட்டி வந்தது. இப்படி இருக்கையில் இந்த மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொள்வார்களா? என்று கேள்வி எழுந்திருந்தது. அதேபோல இருவரும் கலந்துரையாடியுள்ளார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் வினய் குவாத்ரா கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் புதியதாக 6 நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்திருக்கின்றன. அதாவது, அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் புதியதாக உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைவதற்கு சர்வதேச அளவில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இந்த 6 நாடுகள் மட்டும் உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் சர்வதேச எண்ணெய் உற்பத்தியில் 80% இனி பிரிக்ஸ் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இதில் புதியதாக இணைந்துள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் அதிக அளவு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. என்னதான் ஐரோப்பிய நாடுகள் புதைபடிம (பெட்ரோல்,டீசல்) எரிபொருளை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், உலகம் முழுவதும் நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இப்படி இருக்கையில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் நாடுகள் அனைத்து ஓரணியில் திரண்டிருப்பது, எண்ணெய் விற்பனையை அதிகரிக்க செய்யும். அதேபோல இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். இதன் மூலம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவிகிதமாக இருக்கும். மறுபுறம் இந்த நாடுகள் தங்கள் சொந்த நாணயத்தில் வணிகம் செய்யும் திட்டத்தில் இருக்கின்றன. எனவே அமெரிக்க டாலின் மதிப்பும் இனி வரும் காலத்தில் சரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications