பச்சிளம் பிஞ்சுகளை வைத்து கைதிகளை படுகொலை செய்யும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்....பதைபதைக்க வைக்கும் வீடியோ
டமாஸ்கஸ்: பச்சிளம் பிஞ்சுகளை தீவிரவாதிகளாக்கி அவர்களை வைத்தே பிணைக் கைதிகளை படுகொலை செய்யும் வீடியோ ஒன்றை உலகின் மிகக் கொடூரமான இயக்கமான ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஐஎஸ் அமைப்பினர் சிரியாவின் தலைநகர் ரக்காவில் வைத்து கைதிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கைதிகளை படுகொலை செய்யும் அனைவரும் பச்சிளம் குழந்தைகள்.

இங்கிலாந்து, எகிப்து, துருக்கி, துனிசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த 5 சிறுவர்கள் ஐ.எஸ். உடையில் துப்பாக்கியை ஏந்தியவாறு உள்ளனர்.
பின்பு ஒரு சிறுவன் மட்டும் அரபி மொழியில் பேசியபடியே துப்பாக்கியை மேலே தூக்கி சுட பிற சிறுவர்கள் கைதிகளை சுட முயற்சிக்கின்றர். அந்த சிறுவனின் பெயர் அபு அபில்லாஹ் அல் பிரிட்டானி என தெரியவந்துள்ளது.
சிரியாவில் கொல்லப்பட்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தீவிரவாதியின் மகனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
நெஞ்சை பதறவைக்கும் அந்த வீடியோ:












Click it and Unblock the Notifications