குண்டு வெடிப்பாலும் தடைபடாத மோடியின் பெல்ஜியம் பயணம்!
பிரஸல்ஸ்: குண்டு வெடிப்பு, தீவிரவாத அச்சுறுத்தலுக்கு இடையிலும் தனது பிரஸல்ஸ் பயணத்தைத் தொடர்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் மனித வெடிகுண்டு மூலம் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர் தீவிரவாதிகள். விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.

பிரஸல்ஸ் நகரில், இந்தியா-ஐரோப்பிய கூட்டமைப்பு உச்சி மாநாடு, மார்ச் 30-ந் தேதி நடக்கிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக அவர் அங்கு செல்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தனது பயணம் தடைபடாது என்பதைத் தெரிவித்துள்ளார் மோடி. 'பிரதமரின் பிரஸல்ஸ் பயணம் திட்டமிட்டபடி இருக்கும்' என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications