ஐ.நா.வின் சர்வதேச விசாரணைக்கு மைத்ரிபால ஒத்துழைக்க வேண்டும்: இங்கிலாந்து பிரதமர் கேமரூன்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன மனித உரிமைகள் மீறல் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் புதிய அதிபரான மைத்ரிபால சிறிசேனவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Cameron calls on new Lanka president to aid UN rights probe

இங்கிலாந்து பிரதமர் கேமரூன் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனவை நான் வாழ்த்துகிறேன். அமைதியான, ஜனநாயகத் தேர்தல் என்பது இலங்கை நாட்டவர் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌சே மக்களின் முடிவை ஏற்று அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு ஒப்புக் கொண்டதை நான் வரவேற்கிறேன்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு புதிய அதிபரை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+