மனைவியின் உதவியுடன் 59 பெண்களை சீரழித்த கனடா வாலிபர் – கைது!
ஒட்டாவா: கனடாவில் மனைவியின் உதவியுடன் 59 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடா நாட்டில் உள்ள எடோபிகோக் பகுதியில் மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார்.
அவர் யார் என்று தெரியாமல் இருந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அனிட்பிட்ரோ என்பவரை கைது செய்தனர்.
மனைவியும் உடந்தை:
இந்த பாலியல் குற்றங்களுக்கு அவரது மனைவி ஜெகனாரி உடந்தையாக இருந்தார். அவரும் கைது செய்யப்பட்டார்.
99 பிரிவுகளில் வழக்கு பதிவு:
அனிட்பிட்ரோ மீது 99 பிரிவுகளிலும், உடந்தையாக இருந்த மனைவி ஜெகனாரி மீது 6 பிரிவிகளிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிகாலை தூக்கம்:
இக்குற்றங்கள் குறித்து அனிட்பிட்ரோ கூறும்போது, "அதிகாலை நேரத்தில் பெண்கள் அயர்ந்து தூங்குவார்கள்.
சரியான நேரம்:
இதுதான் சரியான நேரம் என கருதி அந்த நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து அவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினேன்.
உடந்தையான மனைவி:
எனது குற்றங்கள் அனைத்திற்கும் எனது மனைவி உடந்தையாக இருந்தார்" என்று கூறினார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.