துபாயில் துவங்கிய தொழிலாளர்களுக்கான கேரம் போட்டி
துபாய்: துபாய் சோனாப்பூர் எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் ஈடிஏ-வின் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கான கேரம் போட்டி 13.09.2013 அன்று மாலை துவங்கியது.
கேரம் போட்டியினை முதுநிலை பொது மேலாளர் பி.எம்.எஸ். ஹமீத் துவக்கி வைத்தார். அவர் தனது துவக்கவுரையில், போட்டியில் அனைவரும் வெல்வது என்பது இயலாது. எனினும் தனது தனித்திறமையின் காரணமாக வெல்ல முடியும். இப்போட்டியில் பங்கேற்று தங்களது நேரத்தை சிறப்புடன் பயன்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கேரம் போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. நிகழ்ச்சியை நலத்துறை அலுவலர் பாலரசு, அஹமது சுலைமான் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நலத்துறை அலுவலர் பீர் முஹம்மது, பாஷா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கேரம் போட்டிக்கு ஈஸி டாப், இன்டர்னேஷனல் மணி எக்ஸ்பிரஸ் ஆகியவை அணுசரனை வழங்கின. வரும் 27ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications