மோசடி மன்னன் மெகுல் சோக்சியை நாடு கடத்த.. டொமின்காவில் முகாமிட்டுள்ள சிபிஐ.. அடுத்து என்ன நடக்கும்
ஆன்டிகுவா: டொமினிக்கா நாட்டில் சிறையிலுள்ள மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்துவர, ஷர்தா ரவுத் என்ற பெண் சிபிஐ அதிகாரி தலைமையிலான குழு இப்போது டொமினிக்காவில் முகாமிட்டுள்ளது.
நாட்டின் முக்கிய நகைக்கடை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த கீதாஞ்சலி நிறுவனத்தை நடத்தி வந்தவர் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இவர் சுமார் 13,578 கோடி ரூபாயை மோசடியான ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பான வழக்கு இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

தப்பியோடிய மெகுல் சோக்சி
இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர், கரிபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, சில ஆண்டுகளுக்கு முன் அங்குத் தப்பியோடிவிட்டார். பல்லாயிரம் கோடி மோசடி செய்துள்ள மெகுல் சோக்சியை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில்தான், கடந்த வாரம் அவர் ஆன்டிகாவில் இருந்து கியூபாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார்.

சிபிஐ குழு
அப்போது மெகுல் சோக்சி டொமினிகா நாட்டில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு இன்று டொமினிக்கா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அவரை நாடு கடத்த தேவையான ஆவணங்களை டொமினிக்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. மேலும், ஷர்தா ரவுத் என்ற பெண் சிபிஐ அதிகாரி தலைமையிலான குழு இப்போது டொமினிக்காவில் முகாமிட்டுள்ளது.

ஷர்தா ரவுத்
சிபிஐ அதிகாரியான ஷர்தா ரவுத் தான் இந்தியாவில் மெகுல் சோக்சி- பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் வழக்கை விசாரணை செய்து வருகிறார். இந்தியாவில் மெகுல் சோக்சி தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி என்பதால் அவரை நேரடியாக நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என இந்தியா சார்பில் டொமிக்கா நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சட்ட ரீதியாகச் சிக்கல்?
ஆனால் அதேநேரம் மெகுல் சோக்சி தற்போது ஆன்டிகுவா குடிமகன் என்பதால் அவருக்கு அந்நாட்டு சட்டப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆன்டிகுவா நாட்டின் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், மெகுல் சோக்சி இந்தியக் குடியுரிமையை சரண்டர் செய்யவில்லை. எனவே, சட்டப்படி அவர் இந்தியக் குடிமகன். இதனால் அவரை நாடு கடத்துவதில் சட்ட ரீதியாக எவ்வித சிக்கலும் எழாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நடக்கும்
இன்று டொமினிக்கா நீதிமன்றம் அவரை நாடு கடத்த அனுமதிக்கும்பட்சத்தில், அந்நாட்டுச் சிறைத் துறை அவர் இந்தியா தரப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். ஷர்தா ரவுத் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழு, ஏற்கனவே அங்கு இருப்பதால், அவர்களிடம் மெகுல் சோக்சி ஒப்படைக்கப்படுவார். அதைத் தொடர்ந்து, அவர் தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுவார். இந்தியாவில் விமானம் தரையிறங்கியதும், ஷர்தா ரவுத் அவரை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்வார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications