பற்றி எரியும் டாக்கா விமான நிலையம்.. சென்னை-வங்கதேச விமான சேவை பாதிப்பு! பயணிகள் அவதி
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் கடும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக டாக்கா விமான நிலையும் முற்றிலும் முடங்கியுள்ளது. விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும் தீ வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்துவதில் கடும் சவால் ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்து காரணமாக சென்னை-டாக்கா விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.

தீ விபத்து குறித்து உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்திருப்பதாவது, "டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தின் சரக்குப் பிரிவில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தீ விபத்து மதியம் 2:15 மணியளவில் நிகழ்ந்தது. விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கவ்சர் மஹ்மூத் இதை உறுதிப்படுத்தினார்.
தீ விபத்து ஏற்பட்ட உடனேயே, விமான நிலையத்தின் தீயணைப்புப் பிரிவினர், பங்களாதேஷ் விமானப்படை தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிற வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இணைந்து செயல்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications