ஜப்பானில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுப்பது ஒரேயடியாக அதிகரிப்பு!
டோக்கியோ: ஜப்பானில் சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படம் எடுப்பது ஒரேயடியாக அதிகரித்துள்ளது.
ஜப்பானில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது.
சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படம் எடுப்பவர்களுக்கு எதிரான சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருத்தம் செய்யப்பட்டது.
ஸ்பை கேமரா கண்காணிப்பு
ரகசிய ஸ்பை கேமராக்கள் மூலம் சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்போர் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வரலாறு காணாத அதிகரிப்பு
இருப்பினும் சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படம் எடுப்போரின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அதிகரித்துள்ளது.
இதுவரை 659 பேர் மீது நடவடிக்கை
இந்த ஆண்டில் இதுவரை சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படம் எடுத்த குற்றத்திற்காக போலீசார் 659 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.
கவலை தரும் நிகழ்வுகள்
ஆபாசப் படங்கள் எடுப்பவர்களிடம் அதிக அளவில் குழந்தைகள் சிக்கி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.