அருணாச்சல பிரதேசம் அருகே வரை வந்து வாலாட்டும் சீனா.. 67 கி.மீ தூரத்திற்கு சாலை போட்டாச்சு
பீஜிங்: அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் சீனா 67 கிலோ மீட்டர் தூரம் உள்ள முக்கியமான நெடுஞ்சாலையை அமைத்து முடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Recommended Video
பிடிஐ செய்தி ஏஜென்சி, இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலை சீனாவால் உலகின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் யார்லங் ஜாங்போ கிராண்ட் கேன்யன் வழியாக கட்டப்பட்டுள்ளது, இந்த பள்ளத்தாக்கின் அதிகபட்ச ஆழம் 6009 மீட்டர்.

7 வருடங்கள்
310 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 2014ம் ஆண்டு துவங்கப்பட்டு, இந்த நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 67.22 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை சீன நகரமான நைஞ்சியில் உள்ள பேட் டவுன்ஷிப்பை, மெடோக் கவுண்டியில் உள்ள பைபங் டவுன்ஷிப்புடன் இணைக்கிறது. இரு நகரங்கள் இடையிலான பயண நேரத்தை இந்த சாலை 8 மணி நேரம் குறைக்குமாம்.

அருணாச்சல பிரதேசம்
மெடாக் என்பது, திபெத்தின் கடைசி மாவட்டமாகும், இது அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் அமைந்துள்ளது என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது. அருணாச்சல பிரதேசம் தனது பிரதேசத்தின் ஒரு பகுதி என்று சீனா தொடர்ந்து வம்பு செய்து வருவதால், இந்த சாலை திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், அருணாச்சல பிரதேசத்தின் மீதான எந்தவொரு சீனாவின் உரிமையையும், இந்திய அரசு தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளது.

அணை திட்டம்
பிரம்மபுத்ரா நதியில் மெகா அணை கட்டும் திட்டத்திற்கு சீனா ஏற்கனவே அனுமதித்துள்ளது. இது இந்தியாவால் எதிர்க்கப்படும் திட்டமாகும். இந்த திட்டம் இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக வம்பு செய்யும் சீனா, கிழக்கு லடாக் பகுதியில் மீண்டும் படைகளை குவித்து வருகிறது.

ராணுவ வீரர்கள்
இன்னொரு பக்கம், கிழக்கு லடாக் பகுதியில் சீனா ராணுவம் மீண்டும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. அங்கு இருக்கும் சீனாவின் பயிற்சி முகாம்களில் கூடுதல் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கோக்ரா மலை அருகிலும், ஹாட் ஸ்பிரிங்ஸ், டெஸ்பாங், சிஎன்என் ஜங்சன் பகுதிகளில் சீனா கூடுதல் படைகளை களமிறக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications