Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெருத்த சந்தேகம்.. தடுப்பூசிகள் போட்டும் எகிறும் கொரோனா தொற்று.. கலங்கும் சீனா.. மீண்டும் லாக்டவுன்

சீனாவில் தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: போதுமான அளவுக்கு சீனாவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், அங்கு தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதன் தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன... அதேசமயம் தொற்று வேகமாக பரவி வருவதால், சீனாவில் லாக்டவுன் அமலாகி உள்ளது.

Recommended Video

    China-வில் மீண்டும் ஆட்டம் காட்டும் Coronavirus.. சீல் வைக்கப்படும் நகரங்கள்

    முதன்முதலில் கொரோனாவைரஸ் சீனாவில்தான் தோன்றியது.. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. ஆனாலும், முதலில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததும் சீனாதான்.

    அதனால் இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரமாகவே திரும்பிவிட்டது.. நாட்டின் பொருளாதார விஷயத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்து கொண்டது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    உலகமெல்லாம் 2வது அலை மிரட்டி கொண்டிருந்தபோதுகூட, சீனாவில் 2வது அலை பாதிப்பு வரவே இல்லை. இப்போது சமீப காலமாகவே தொற்று உயர்ந்து வருகிறது.. ஞாயிற்றுக்கிழமை வரை பதிவான 133 நோய்த்தொற்றுகளில், 106 பேர் 13 சுற்றுலா குழுவை சேர்ந்தவர்கள் என்று சீன சுகாதார துறை தெரிவிக்கிறது. டெல்டா வகை வைரஸ் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அளவில் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹாட்ஸ்பாட்டாக இஜினா நகரம் எச்சரிக்கப்பட்டு அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளது... டெல்டா வைரஸ் பரவல் இங்குதான் அதிகமாகும் என்கிறார்கள்..

    சந்தேகம்

    சந்தேகம்

    இதைதவிர, நிங்சியா, பீஜிங், ஹூனான் ஆகிய மாகாணங்களிலும் புதிய வைரஸ் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன... இது சீன அரசை நிலைகுலைய வைத்து வருகிறது..சீனாவின் மக்கள்தொகையில் சுமார் 75 சதவிகிதம், அதாவது நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது... இதுததான் பெருத்த சந்தேகமாக எழுந்துள்ளது..

    தடுப்பூசிகள்

    தடுப்பூசிகள்

    கடந்த 4 நாட்களாகவே, தலைநகர் பீஜிங்கில் யாருமே நுழைய கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹாங்ஃபுயுவான் என்ற பகுதி முற்றிலும் மூடப்பட்டுள்ளது... அங்கு 30 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்... 20 ஆயிரத்திற்கு அதிகமான சுகாதார பணியாளர்கள், அந்நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

     தள்ளிவைப்பு

    தள்ளிவைப்பு

    பிப்ரவரியில் 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்கு நகரம் தயாராகும் நிலையில், பெய்ஜிங்கில் தொற்றை கட்டுப்படுத்த, சீன அரசு இப்போதே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது... கொரோனா பரவலை தொடர்ந்து அக்டோபர் 31 அன்று திட்டமிடப்பட்டிருந்த மாரத்தான் போட்டியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது... ஆனால், மறுதேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+