இருண்ட நிலவில் விண்கலத்தை இறக்கி ஆராய்ச்சி.. திட்டமிடும் சீனா
பெய்ஜிங்: சந்திரனின் கருமையான பகுதிகளுக்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சி செய்ய சீனா முடிவெடுத்துள்ளது.
சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்பி அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷியா ஆகிய நாடுகள் ஆய்வு மேற் கொண்டுள்ளன. தற்போது சீனா 3 ஆவது நாடாக சந்திரனுக்கு சேஞ்சா3 என்ற விண்கலத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு அனுப்பி ஆய்வு செய்தது.
பின்னர் அது வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியது.

வெளிச்சமும், இருட்டும்:
சந்திரனின் வெளிச்சமான மற்றும் இருட்டு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் விண்கலங்கள் இருட்டு பகுதியில் தரை இறக்கப்படவில்லை. அந்த முயற்சியில் இதுவரை எந்த நாடும் ஈடுபடவில்லை.

தரையிறக்க சீனா திட்டம்:
அந்த முயற்சியில் ஈடுபட சீனா திட்டமிட்டுள்ளது. அதற்காக சேஞ்ச்.4 என்ற விண்கலத்தை மீண்டும் சந்திரனுக்கு அனுப்ப தயாராக உள்ளது. வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பூமியின் மாற்றங்கள் பற்றி ஆய்வு:
சந்திரனின் இருள் சூழ்ந்த பகுதியில் நிலவும் குறைந்த அளவிலான ரேடியோ அலைவரிசை மற்றும் பூமியின் மாற்றங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது.

சிக்கல்கள் ஜாஸ்தி:
அதற்காக அங்கு விண்கலத்தை தரை இறக்கும் இடம் தேர்வு செய்வதில் அதிக சிக்கலும், அதிக தொழில்நுட்ப பிரச்சினைகளும் உள்ளன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications