ஊசி மூலம் குழந்தைகளுக்கு கோழி ரத்தம்.. சீனாவில் பிரபலமாகி வரும் ‘சிக்கன் பேரண்டிங்’!
சீனாவில் சிக்கன் பேரண்டிங் எனப்படும் வினோத குழந்தை வளர்ப்பு முறை பிரபலமாகி வருகிறது.
பீஜிங்: தங்கள் குழந்தைகளை எதிர்காலத்தில் அதிக திறன்படைத்தவர்களாக மாற்றுவதற்காக, கோழியின் ரத்தத்தை ஊசி மூலம் உடலில் செலுத்தும் 'சிக்கன் பேரண்டிங்' எனப்படும் வினோத வளர்ப்பு முறை சீன பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு பெற்றோருக்குமே தங்களது பிள்ளைகள் புத்திசாலிகளாக, வாழ்க்கையில் வெற்றியாளர்களாக வலம் வர வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அவர்களின் எதிர்காலத்திற்காக தங்களது நிகழ்காலத்தை அடகு வைக்க தயங்கவே மாட்டார்கள்.
சிலர் தங்களது குழந்தைகளுக்கு அறிவுச் செல்வத்தை சேமித்து தரும் செயல்களை மேற்கொள்வார்கள். ஆனால், வேறு சிலரோ குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வினோதமான செயல்களைச் செய்வார்கள். தற்போது சீனாவிலும் அது போல் தான், சிக்கன் பேரண்டிங் (chicken parenting) எனப்படும் வினோதப் பழக்கம் ஒன்று பிரபலமாகி வருகிறது.

ஊசி மூலம் ரத்தம்
கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கும் இந்த சிக்கன் பேரண்டிங் முறையில், பெற்றோர் / பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கோழியின் இரத்தத்தை ஊசி மூலம் செலுத்துகிறார்கள். இது எதிர்காலத்தில் அக்குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருப்பதற்கும், கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் மருந்தாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

பெற்றோர்களின் நம்பிக்கை
இந்தக் கோழி இரத்த ஸ்டீராய்டுகள் குழந்தைகளிடம் (Children) உயர் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறதாம். இதனால் குழந்தைகள், கல்வி விளையாட்டு என அனைத்திலும் மிக அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள் என்றும் அவர்களது செயல்திறனை பன்மடங்கு அதிகரிப்பதாகவும் சீனப் பெற்றோர்கள் கூறுவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மன அழுத்தத்திற்கு தீர்வு
அதோடு சீன இளைஞர்கள் இடையே மன அழுத்தம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே குழந்தையிலேயே கோழி இரத்தம் செலுத்தினால் பின்னாளில் இந்த மாதிரியான பிரச்சனைகள் வராமல் இருக்கும் என்றும் சீனப் பெற்றோர்கள் நினைப்பதாகக் கூறப்படுகிறது. இதுவும் சிக்கன் பேரன்டிங் வளர்ப்பு முறை அதிகரித்து வர ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

பிரபலம்
சப்சீனா என்ற இணையத்தில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, இந்த 'சிக்கன் பேரண்டிங்' வளார்ப்பு முறை சமீபகாலமாக அங்கு பிரபலமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோ போன்ற நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மத்தியில் இந்த பழக்கம் அதிகமாக உள்ளது.

ஹெலிகாப்டர் பேரண்டிங்
இது போன்ற பல பழக்கவழக்கங்கள் பின் தங்கிய நாடுகளில் மட்டுமல்ல, பல முன்னேறிய நாடுகளிலும் காணப்படுகிறது. அமெரிக்கப் பெற்றோர்கள் பலரும் 'ஹெலிகாப்டர் பேரன்டிங் ' என்கிற பழக்கத்தை கொண்டிருப்பதாக அந்நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது குழந்தைகளை வெவ்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்த்து அவர்களை படித்தி எடுப்பதுதான் இந்த ஹெலிகாப்டர் பேராண்டிங் என்பதாகும்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications