அருணாச்சலப் பிரதேசத்தை காட்டி.. உள்ளடி வேலை பார்க்கும் டிரம்ப்! பென்டகன் டம்மி.. சீனா விளாசல்
பெய்ஜிங்: அருணாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றுவதன் மூலம், சீனா வல்லரசாக உருவாக முயற்சிக்கிறது என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீனா, பென்டகன் டம்மி பீசு! இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லை பிரச்சனையை அமெரிக்கா தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்று கூறியிருக்கிறது.
பென்டகன் அறிக்கை பிளவுகளை உருவாக்குவதாகவும், தவறான தகவல்களை பரப்புவதாகவும் சீனா கடுமையாக சாடியுள்ளது. இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என சீனா விளக்கமளித்துள்ளது.

சீனா எதிர்ப்பு
அமெரிக்க-இந்தியா உறவுகளை பலவீனப்படுத்தவும், பாகிஸ்தானுடன் பாதுகாப்புத் தொடர்புகளை ஆழப்படுத்தவும் சீனா முயன்று வருகிறது என்று பென்டகன் அறிக்கை குற்றசம்சாட்டியிருந்தது. ஆனால் இந்த அறிக்கை ஒருதலைபட்சமானது, பொறுப்பற்றது என சீனா விமர்சித்திருக்கிறது. சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் லி ஜிங்லியன், பென்டகன் அறிக்கை குறித்து கூறுகையில்,
நாட்டாண்மை தனம்
"எங்களுக்கு என பாதுகாப்பு கொள்கைகள் இருக்கின்றன. இதனை அமெரிக்கா சிதைக்கிறது. சீனாவுக்கும் இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கு இடையில் மோதலை தூண்டி விடுகிறது. அமெரிக்கா நாட்டாண்மை தன்மை செய்வது எல்லோருக்கும் தெரியும். இந்த நாட்டாண்மை தனத்தை தக்க வைத்துக் கொள்ள, அதை மெயின்டெய்ன் செய்ய இப்படியான கதைகளை அவிழ்த்து விடுகிறது.
இந்தியா-சீனா
அருணாச்சலப் பிரதேசம் விவகாரத்தில், தனித்துவமான நிலைப்பாட்டை நாங்கள் கையாள்கிறோம். நீண்ட காலம் இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் நாங்கள் இதை செய்கிறோம். தகவல்தொடர்புகளை வலுப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளைச் சரியான முறையில் கையாளவும், வலுவான மற்றும் நிலையான இருதரப்பு உறவை மேம்படுத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்தியா-சீனாவை பொறுத்தவரை எல்லைப்பிரச்சனை இருநாடுகளுக்கும் நிலையானதாக இருக்கிறது. இதற்கு இரு நாடுகளும் சேர்ந்து தீர்வு கண்டு வருகிறோம்.
பாக்.,-சீனா
பாகிஸ்தான் விவகாரங்களை பொறுத்தவரை, பாகிஸ்தானுடன் சீனா இராணுவத் தளத்தை நிறுவுவதைக் கருத்தில் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் சீனா-பாக்., இடையே கூட்டணி இருப்பதாக பென்டகன் கூறுகிறது. விஷயம் என்னவெனில், எங்கள் நாட்டின் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா அதிகமாக தலையீடு செய்கிறது. எங்களுடைய நடவடிக்கைகளை தவறாக சித்தரிக்கிறது. சீனாவின் இராணுவ வளர்ச்சி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. சீன இராணுவத்தின் இயல்பான நடவடிக்கைகளுக்கு அவதூறு பரப்பியுள்ளது" என்று கூறியுள்ளார்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
சீனாவை பற்றி அமெரிக்கா குற்றம் சொல்வதற்கு தகுதியான நாடே கிடையாது. உலகின் மிக கொடூரமான போர்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. எந்த காரணமும் இல்லாமல், லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இந்த போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படியான நாடு, சீனாவிடம் எல்லாம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்வது வேடிக்கையானது. ஆட்டுக்குட்டிக்காக ஓநாய் கண்ணீர் வடிப்பதை போன்று இருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications