பாகிஸ்தானில் சீனர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது.. விடமாட்டோம்.. சீனா கடும் வார்னிங்
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 4 சீன நாட்டவர்கள் பலியாகினர். பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியும் 2 குழந்தைகளின் தாயுமான பெண் ஒருவரே இத்தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் சீனர்கள் கொல்லப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு அர்சு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

3 சீனர்கள் பலி
பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக் கழகத்தில் கன்பூசியஸ் ஆய்வு மையத்தில் சீன மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு மையம் அருகே தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கன்பூசியஸ் ஆய்வு மையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்ட வேன் ஒன்றை தற்கொலைதாரி வெடிக்க வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 சீனர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இச்சம்பவம் பாகிஸ்தான், சீனாவை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.

சீனா கோபம்
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் மண்ணில் சீனர்கள் வீணாக ரத்தம் சிந்துவதை அனுமதிக்க முடியாது; இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசப்பட்டிருக்கிறது சீனா. இதனிடையே இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
|
பலுசிஸ்தான் தீவிரவாதிகள்
பலுசிஸ்தான் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் தனிநாடாக பிரிய வேண்டும் என்ற கோரிக்கைக்கான ஆயுதப் போராட்டத்தை இந்த இயக்கம் நடத்தி வருகிறது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் இயக்கத்தின் மஜீத் பிரிகேட் இத்தற்கொலை தாக்குதலை நடத்தியது. பலுசிஸ்தான் மாகாணத்தில் சீனா, பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடர்ந்தால் எங்கள் தாக்குதல்களும் தொடரும் என தெரிவித்துள்ளது.
Recommended Video

தற்கொலைதாரி பெண்
இந்நிலையில் கராச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது ஒரு பெண் என்றும் அவரது புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.கராச்சி தற்கொலைதாரியின் பெயர் Shari Baloch (வயது 30). இவர் எம்.எஸ்.சி. விலங்கியல் பட்டம் படித்தவர்; 2 குழந்தைகளுக்கு தாய். தற்கொலைதாரியின் கணவர் ஒரு மருத்துவர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications