அருணாசலப்பிரதேசத்தில் சீனா அட்டூழியம்.. 2வது கிராமத்தை கட்டிய பிஎல்ஏ ராணுவம்.. சாட்டிலைட் போட்டோஸ்!
இட்டா நகர்: அருணாசலப்பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் சீனா புதிய கிராமம் ஒன்றை கட்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த வருடம் சீனாவின் கிராமம் ஒன்று இங்கு கண்டிபிடிக்கப்பட்டது.
60 வீடுகள் கொண்ட புதிய கிராமத்தை சீனா அருணாசலப்பிரதேசத்தில் கட்டி உள்ளது. 2019ல் இங்கு இல்லாத கிராமம் 2 வருடங்களில் சீனா மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ல் அருணாசலப்பிரதேசத்தில் எல்லைக்கு அருகே கிராமம் ஒன்றை சீனா கட்டியது.
அந்த கிராமத்தில் இருந்து 93 கிமீ தூரத்தில் இரண்டாவது கிராமத்தை சீனா கட்டி இருப்பதாக சாட்டிலைட் விவரங்கள் தெரிவிக்கின்றன.

எங்கே?
ஆங்கில ஊடகமான என்டிடிவி இந்த செய்தியை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த புதிய கிராமம் இந்தியாவின் எல்லைக்கு 6 கிமீ உள்ளே கட்டப்பட்டு உள்ளது. முன்னதாக முதல் கிராமம் குறித்த செய்தி கடந்த வருடம் வெளியானது. இதை சில நாட்களுக்கு முன் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உறுதி செய்தது.

இரண்டாவது கிராமம்
தற்போது இரண்டாவது கிராமம் கட்டப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா முறைகேடாக ஆக்கிரமித்த நிலங்களில் இந்த கட்டுமானங்களை மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு 60க்கும் மேற்பட்ட வீடுகளை சீனா கட்டி இருக்கிறது. கட்டுப்பாட்டு பகுதிக்கும் சர்வதேச எல்லைக்கும் இடையில் இருக்கும் இந்தியாவிற்கு சொந்தமான பகுதியில் சீனா இதை கட்டி உள்ளது.

மக்கள் இருக்கிறார்களா?
ஆனால் இந்த கட்டுமானத்திற்கு உள்ளே சீன மக்கள், ராணுவத்தினர் இருக்கிறார்களா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் , Maxar Technologies and Planet Labs நிறுவனம் மூலம் பெறப்பட்டுள்ளது. இது அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் ஷி யோமி கிராமம் ஆகும். இந்தியாவிற்கு கீழ் வரும் கிராமம் ஆகும்.

மேப்
அதேபோல் இந்த கட்டிடம் ஒன்றில் உச்ச மாடியில் பெரிய அளவில் சீன கொடி வரையப்பட்டு இருக்கிறது. வானத்தில் இருந்து பார்த்தால் சீன கொடியை பார்க்கும் வகையில் வரையப்பட்டு உள்ளது. அதேபோல் டிஜிட்டல் மேப் சர்வே, ஜியோ லொகேஷன் சர்வே ஆகியவையும் இந்த பகுதி இந்தியாவிற்கு கீழ் வருவதை உறுதி செய்து உள்ளது. ஆனால் இந்திய ராணுவம் இதை மறுத்துள்ளது.
Recommended Video

விளக்கம்
சீனாவிற்கு கீழ் வரும் வடக்கு கட்டுப்பாட்டு பகுதியில் இந்த இடம் வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த பகுதி சர்வதேச எல்லைக்கும் கட்டுப்பாட்டு பகுதிக்கும் இடையில் வருவதால் கண்டிப்பாக அது இந்தியாவிற்கு சொந்தமான இடம்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அருணாசலப்பிரதேச அரசு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications