சபாஷ் சீனா.. நிலவில் எடுத்த பாறை துகள்களை சுமந்து.. பூமிக்கு வந்தடைந்தது "சேஞ்ச்5" விண்கலம்..!
சீன விண்கலம் சேஞ்ச்5 நிலவில் இருந்து பூமிக்கு வந்தடைந்தது
பெய்ஜிங்: கடந்த 24-ம் தேதி சீனாவில் இருந்து விண்கலம் ஒன்று நிலாவுக்கு அனுப்பப்பட்டது... அந்த விண்கலம் இப்போது நிலவில் எடுக்கப்பட்ட பாறை துகள்களுடன் பூமிக்கு திரும்பி இருக்கிறது.
நிலவில் இருந்து பாறை துகள்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வுகளை நடத்துவதற்காக "சேஞ்ச்5" என்ற விண்கலத்தை சீனா கடந்த 24-ந்தேதி விண்ணில் செலுத்தியது.
அது கடந்த 1ம் தேதியே நிலவை சென்றடைந்துவிட்டது.பிறகு, விண்கலத்தில் இருந்து லேண்டர்அசென்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.

விண்கலம்
அங்கிருந்த பாறைதுகள்கள், மண் மாதிரிகளை எடுத்து கொண்டு லேண்டர்அசென்டர் நிலவு பரப்பிலிருந்து கடந்த 3-ந்தேதி புறப்பட்டு, நிலவைச் சுற்றிக்கொண்டிருந்த "சேஞ்ச்5" என்ற விண்கலத்துடன் இணைக்கப்பட்டது. அந்த "சேஞ்ச்5" விண்கலம்தான் பூமியை நோக்கி புறப்பட்டு வந்துள்ளது.. இதை சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அறிக்கை
இது குறித்து அந்த அமைப்பு ஒருஅறிக்கையும் வெளியிட்டுள்ளது.. அதில், "நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த சேஞ்ச்5 விண்கலத்தின் பாதை பூமியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பப்பட்டது... அந்த விண்கலத்திலிருந்த 4 என்ஜின்கள் 22 நிமிஷங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்ட பாதை பூமியை நோக்கி இன்று விடிகாலை திரும்பியது" என்று தெரிவித்துள்ளது.

ஆய்வு
அதன்படியே அந்த விண்கலம் இன்று விடிகாலை 1.30 மணியளவில் சீனாவின் சிசிவாங்க் மாவட்டத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது... இதையடுத்து, அந்த விண்கலத்தில் கொண்டுவரப்பட்ட நிலவின் பாறை, கல் துகள்களை சேகரித்த சீன விண்வெளி விஞ்ஞானிகள் அதை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பெருமை
இதன்மூலம் நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்த 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த பெருமையை அமெரிக்காவும், ரஷ்யாவும் இப்படித்தான் விண்கலத்தை அனுப்பி நிலவிலிருந்து பாறைகள், மணல் போன்றவற்றை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தன. இப்போது 45 வருஷத்துக்கு பிறகு, சீனா இந்த பெருமையில் 3வதாக இணைந்துள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications