கல்வான் மோதலில் உயிரிழந்த சீன வீரருக்கு.. நூற்றாண்டின் சிறந்த வீரர் விருது.. சீன ராணுவம் அறிவிப்பு
பெய்ஜிங்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த சீன வீரர், நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை.
குறிப்பாக, கடந்த ஜூன் மதம் 16ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்தது.
இந்தியா - சீனா எல்லை மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா - கல்வான் சம்பவம்
நூற்றாண்டின் சிறந்த வீரர்
கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தியா தனது 20 வீரர்களை இழந்திருந்தது. அதேபோல சீனா ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் கொல்லப்பட்ட நான்கு சீன ராணுவ வீரர்களில் ஒருவரான தளபதி சென் ஹோங்ஜுன் (30) என்பவர், அந்நாட்டின் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
குளோபல் டைமஸ்
அவருடன் சேர்ந்து மொத்தம் 29 வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சீனாவின் அரசு ஊடகமான குளோல் டைமஸ் வெளியிட்ட செய்தியில், "சென் ஹோங்ஜுன் 10 ஆண்டுகளாக எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை காரணமாகச் சீனாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்க உயிரிழந்தார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 பேர் பரிந்துரை
இந்தியா ராணுவம் ஒருபோதும் எல்லையைத் தாண்டி சென்று பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என இந்திய ராணுவம் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விருதுக்கு மொத்தம் 29 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இறுதி முடிவு எடுப்பதற்கு முன், ஜூன் 4 ஆம் தேதி வரை இந்த பட்டியல் தொடர்பாகப் பொதுமக்கள் கருத்துகள் கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அந்த கொண்டாடத்தின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் சிறந்த விளங்கிய வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்கவுள்ளார்.