கல்வான் மோதலில் உயிரிழந்த சீன வீரருக்கு.. நூற்றாண்டின் சிறந்த வீரர் விருது.. சீன ராணுவம் அறிவிப்பு
பெய்ஜிங்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த சீன வீரர், நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை.
குறிப்பாக, கடந்த ஜூன் மதம் 16ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்தது.

நூற்றாண்டின் சிறந்த வீரர்
கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தியா தனது 20 வீரர்களை இழந்திருந்தது. அதேபோல சீனா ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் கொல்லப்பட்ட நான்கு சீன ராணுவ வீரர்களில் ஒருவரான தளபதி சென் ஹோங்ஜுன் (30) என்பவர், அந்நாட்டின் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

குளோபல் டைமஸ்
அவருடன் சேர்ந்து மொத்தம் 29 வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சீனாவின் அரசு ஊடகமான குளோல் டைமஸ் வெளியிட்ட செய்தியில், "சென் ஹோங்ஜுன் 10 ஆண்டுகளாக எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை காரணமாகச் சீனாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்க உயிரிழந்தார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 பேர் பரிந்துரை
இந்தியா ராணுவம் ஒருபோதும் எல்லையைத் தாண்டி சென்று பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என இந்திய ராணுவம் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விருதுக்கு மொத்தம் 29 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இறுதி முடிவு எடுப்பதற்கு முன், ஜூன் 4 ஆம் தேதி வரை இந்த பட்டியல் தொடர்பாகப் பொதுமக்கள் கருத்துகள் கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அந்த கொண்டாடத்தின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் சிறந்த விளங்கிய வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்கவுள்ளார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications