ஏசுவா உங்களை காப்பாற்றப்போகிறார்? அதிபர் போட்டோவை பூஜையறையில் மாட்டுங்கள்.. சீனாவில் அட்டூழியம்
பீஜிங் : சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டுமானால் தங்களின் வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருவதால் சர்ச்சை வெடித்துள்ளது.
சீனாவில் ஒரு கோடி மக்களில் 11 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர் என்பது அதிகாரப்பூர்வ தகவல். இதில் கிட்டத்தட்ட 10% கிறிஸ்தவர்கள்.
உலகின் மிகப்பெரிய மதசார்பற்ற நாடாக விளங்கும் சீனாவில், இப்போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது உலக நாடுகளிடையே அதிலும் கிறிஸ்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதசார்பின்மை நாடு
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி நடக்கிறது. இதன்பிறகு, மதங்களின் மீதான நம்பிக்கையை நீக்கிவிட்டு, தங்கள் கட்சியின் மீது மதம் போன்ற ஒரு நம்பிக்கையை மக்கள் வைத்துக்கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.

அதிபர் படம்
எனவே சீனாவில் ஏராளமான கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் அரசின் நலத்திட்டங்களைப் பெற கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஏசுவின் படத்துக்குப் பதிலாக அதிபர் ஜின்பிங் படத்தை வைக்க அதிகாரிகள் வலியுறுத்தியதாக சீனாவில் வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழில் வெளியான செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர்தான் காப்பாராம்
சீனாவின் யுகான் மாகாணத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் அதிகாரிகள் முதலில் கை வரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர். ஏசு நாதர், மக்களை வறுமையில் இருந்து வெளிக் கொண்டுவரவோ, நோய்களில் இருந்து காப்பாற்றவோ மாட்டார் என்றும், ஆனால் அதை அதிபர் ஜின்பிங் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே செய்ய முடியும் என்பதே யதார்த்தம் என்றும் அதிகாரிகள் 'மதமாற்றம்' செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சலுகைகள் ரத்து
ஏசுவின் படத்தை நீக்கி விட்டு அதிபரின் படத்தை மாட்டாவிட்டால் அரசின் சலுகைகளை பெறவோ, வறுமை நிவாரண நிதிகளை பெறவோ வாய்ப்பில்லை என சீனாவிலுள்ள கிறிஸ்தவ மக்களிடம் அதிகாரிகள் கூறி வருவதாக மக்கள் தெரிவிப்பதாக அந்த பத்திரிகை செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications