பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்... உகாண்டாவில் 55 பேர் பலி
உகாண்டாவில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற பயங்கர மோதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
கம்பாலா: உகாண்டாவில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பையும் சேர்ந்த 55 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு உகாண்டாவில் உள்ள காசேஸ் நகரில் அரசு படையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்புப் படையினர் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டை பல மணி நேரம் நீடித்தது.
இரு தரப்பினரும் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவத்தினர் 14 பேர் மற்றும் 41 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.மோதலில் 55 பேர் உயிரிழந்ததை உகாண்டா அரசும் உறுதி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications