காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்: லண்டனில் தமிழர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil

காமன்வெல்த் மாநாடு வரும் 10ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்குகிறது. இந்த மாநாடு வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுத்தி அங்கு வாழும் தமிழர்கள் நேற்று லண்டனில் மாபெரும் கண்டன பேரணி நடத்தினர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் காமன்வெத் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும், ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications