காலி அடுக்குமாடி குடியிருப்பு... வீட்டின் கழிப்பறையில்... மனிதக் கழிவிலும் கொரோனா!!
பீஜிங்: சீனாவின், குவாங்சோ மாகாணத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இல்லாத அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் கழிப்பறை குழாய் வழியாக வைரஸ் கிருமிகள் வெளியேறி காற்றின் மூலம், ஹாங்காங்கில் பெரிய அளவில் சார்ஸ் வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் மக்கள் குடியில்லாத வீடுகளின் கழிப்பறையில் இருக்கும் ஷவர், சிங்க், குழாய் ஆகியவற்றிலும் கொரோனா வைரஸ் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை சீனாவின் தொற்று நோய் தடுப்பு மையம் தெரிவித்து இருந்தது. இந்த வீட்டுக்கு கீழ் தளத்தில்தான் ஐந்து பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த வீட்டின் கழிப்பறையில் இருந்து வெளியேறிய காற்றில் இருந்தும், கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதியாகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் மனிதர்களின் மலத்தில் இருந்தும், வெளியேறும் காற்றில் இருந்தும் கொரோனா வைரஸ் பரவும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸில் இருந்து உருவானதுதான் சார்ஸ். இந்த நோய்க்கு ஹாங்காங்கில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 42 பேர் உயிரிழந்து இருந்தனர். இதற்குக் காரணம், அந்த அடுக்குமாடியில் சுமார் 329 பேருக்கு இதேபோன்று கழிப்பறை வாயிலாக கொரோனா வைரஸ் பரவி இருந்தது தெரிய வந்தது. கழிப்பறையில் இருக்கும் குழாய் வாயிலாக வைரஸ் வெளியேறும்போது, மற்றவர்களது வீட்டின் கழிப்பறை குழாய் சேதம் அடைந்து இருந்தால், எளிதாக அதன் வாயிலாக கொரோனா வைரஸ் பரவும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறி இருந்தன. அவ்வாறுதான் ஹாங்காங்கிலும் 329 பேருக்கு தொற்று பரவியது என்று சமீபத்திய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கழிப்பறைகளில் போதிய நீர் இல்லாமல் இருந்தாலும், கழிவுகள் குழாய்களில் சரியாக வெளியேறாமல், வைரஸ்களை பரப்பும் என்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இயக்குநர் லிடியா மொரவ்ஸ்கா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பொதுவாக மூச்சுக் குழாயில் இருந்து வெளியேறும் திரவம் மற்றும் உமிழ்நீர் வழியாகத்தான் வெளியேறும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஆனால், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா பாதித்த மனிதரின் மலத்தில் இருந்தும் கொரோனா வைரஸ் பரவும் என்பதை முன்பே உறுதிபடுத்தி இருந்தது.
குவாங்க்டாங் மாகாணத்தில் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 73 பேருக்கு அவர்களது மலத்தில் கொரோனா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முந்தைய ஆய்வுகளும் கழிப்பறைகளும் கொரோனா வைரஸை பரப்பும் என்று தெரிவித்து இருந்தன.












Click it and Unblock the Notifications