நடுங்கும் ரஷ்யா.. 1.70 லட்சத்தை நெருங்கும் கேஸ்கள்.. கதிகலங்கும் மக்கள்.. துரத்தும் கொரோனா..!
ரஷ்யாவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது
மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 21,624 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்... இது அந்நாட்டு மக்களை மேலும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.
Recommended Video
உலக அளவில் தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது.. தொற்று அதிகமுள்ள நாடுகளின் லிஸ்ட்டில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளன...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியை கடந்தும் போய் கொண்டிருக்கிறது.. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒன்றரை கோடி பேருக்கும் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்... சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. .. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்க தொடங்கியுள்ளது... இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

கலக்கம்
இப்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது... உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

ரஷ்யா
இதற்கு அடுத்தப்படியாக, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.... ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 21,624 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 லட்சத்தை கடந்துள்ளது.

பலி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 816 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை மொத்தம் 1.70 லட்சத்தை தாண்டி உள்ளது அம்மக்களுக்கு பெருத்த கவலையை ஏற்படுத்தி வருகிறது... அங்கு தொற்றில் இருந்து 58.84 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்... மேலும், இப்போதைக்கு 5.46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.. இதையடுத்து, தடுப்பூசி விஷயத்தில் தன் மொத்த கவனத்தையும் தீவிரமாக திருப்பி கொண்டிருக்கிறது ரஷ்யா.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications