கொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏ.டி.எம். மூலம் இலவச அரிசி வழங்கும் வியட்நாம்
ஹனோய்: கொரோனாவை லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட வியட்நாமில் பொதுமக்களுக்கு ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வியட்நாம் அரசு படுதீவிரமாக இருக்கிறது. இதுவரை வியட்நாமில் 265 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க லாக்டவுன், தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் ஆகியவற்றில் அந்நாட்டு அரசு மும்முரமாக கவனம் செலுத்துகிறது. மேலும் சிறு குறுந்தொழில் நிறுவனங்களையும் வியட்நாம் அரசு மூடியுள்ளது.
இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இப்படி வருவாயை உடனடியாக இழக்க நேரிட்ட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் வியட்நாமின் பல நகரங்களில் இலவச அரிசி வழங்கும் ஏ.டி.எம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும் வர்த்தகர்கள், தன்னார்வலர்கள் இந்த ஏடிஎம் இயந்திரங்களை அமைத்துள்ளனர்.
ஹனோய் நகரில் வாட்டர் டேங்கில் அரிசி நிரப்பப்பட்டு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் சுமார் 6 அடி இடைவெளிவிட்டுதான் நிற்க வேண்டும் என கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது.
ஹூய் நகரில் கல்லூரி ஒன்றில் ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் மக்களுக்காக 2 கிலோ அரிசியை இலவசமாக பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஹோசிமின் நகரத்தில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய அரிசி ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல் வியட்நாமின் பல நகரங்களில் மேலும் பல அரிசி ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications