உலக நாடுகளில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,17,100 ஆக அதிகரிப்பு
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,17,100 ஆக அதிகரித்துள்ளது.
உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது கொரோனா. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,79,98,419 ஆகும்.

கொரோனாவால் உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,87,783. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,13,17,100.
உலக நாடுகளில் அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உச்சமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,63,609. பிரேசிலில் இது 27,08,876 ஆகவும் இந்தியாவில் 17,51,919 ஆகவும் உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 1,57,877 பேர் இறந்துள்ளனர். பிரேசிலில் மட்டும் கொரோனா மரணங்கள் ஒரு லட்சத்தை நோக்கி செல்கிறது. இங்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 93,616.
ஆனால் இந்தியாவில் 37,403 பேர்தான் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, மெக்சிகோ, அர்ஜெண்டினா, பிலிப்பைன்ஸ், ஈராக், ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications