60% மக்கள் தடுப்பூசி போட்ட பிறகும்..இஸ்ரேலில் அதிகரிக்கும் கொரோனா..என்ன காரணம்?. நிபுணர்கள் விளக்கம்
ஜெருசலேம்: இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா கொரோனா அலையை சமாளிக்க முடியாமல் தள்ளாடியது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா அதிகரித்து வந்தது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு மிக குறைவாக இருந்த இஸ்ரேல் ஏராளமான தளர்வுகளை அளித்து பொது இடங்களை திறந்து விட்டது.
ஏராளமான மக்கள் தடுப்பூசி போட்டு இருந்ததால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்தது. பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இதற்கான விளைவை சில நாட்களில் இஸ்ரேல் அனுபவித்தது.

டெல்டா வைரஸ் காரணமாக ஜூலை மாதம் நடுப்பகுதியில் இருந்து இஸ்ரேலில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கின. இஸ்ரேலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,818 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 1,100 பேர் தற்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர், அதில் 700 பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக குழந்தைகள் மத்தியில் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் கிட்டத்தட்ட 60% தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அதுவும் பெரும்பாலானோர் இரண்டு டோஸும் போட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது ஏன்? தடுப்பூசி டோஸ் வேலை செய்யவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மார்ச் மாதத்திலேயே இஸ்ரேல் நாட்டின் 9.3 மில்லியன் மக்களில் 50% பேர் தடுப்பூசி போட்டு விட்டனர். தொற்று (64%) மற்றும் அறிகுறி நோயை கண்டறிதல் (64%) ஆகியவற்றைத் தடுப்பதில் தடுப்பூசியின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து கேள்வி எழும்பும் வேளையில் இஸ்ரேல் நாடு ஒப்புதல் அளித்த ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் தொடக்கத்தில் 95% நோய் எதிர்ப்பு சக்தியுடன் செயல்படுவதாக கூறப்பட்டதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்ததால், மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை. இதன் காரணமாகவும் பள்ளிகளை திறந்து விட்டதாலும் தொற்று அதிகரித்து விட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
எந்த தடுப்பூசியும் 100% முழு பாதுகாப்பை வழங்க முடியாது.நோய்வாய்பட்ட ஒவ்வொரு நபரிடமும் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை மாறுபடும். இதனால் தடுப்பூசி செலுத்திய பிறகும் திருப்புமுனை நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிப்பு அதிகரிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஃபைசர்/பயோஎன்டெக் உள்ளிட்ட கூட்டு தடுப்பூசிகள் டெல்டா வகைக்கு எதிராக சிறந்தவை, ஆனாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூன்றாவது டோஸ் கட்டாயம்(பூஸ்டர் டோஸ்) செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனாலும் காலப்போக்கில் இதில் மாற்றமடையலாம் ஓரிரு வருடங்களில் மக்களுக்கு நான்காவது டோஸ் போட வேண்டிய நிலையும் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து இது அமையும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெளிவாக கூறுகின்றனர். ''நோய் எதிர்ப்பு சக்தி குறைவது ஒரு உண்மையான சவாலாகும், ஒவ்வொரு நாடும் சமாளிக்க ஒரு தற்செயல் திட்டத்தை தயார் செய்ய வேண்டும்'' என்று இஸ்ரேலிய சுகாதார பராமரிப்பு நிறுவனமான கிளாலிட்டின் தலைமை அதிகாரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications