பெரும் சிக்கல்.. கென்ய நாட்டில் உடைந்த அணையின் சொந்தக்காரர் யார் தெரியுமா?
Recommended Video

நைரோபி: கென்ய நாட்டில் அணை ஒன்று வெடித்து 47 பேர் வரை பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது இந்திய வம்சாவளியை சேர்ந்தவருடைய அணை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மன்சுகுல் பட்டேல் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெரும் விவசாயிக்கு சொந்தமான இந்த அணை சோலை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதுவும் தமிழ்ப்பெயர் என்பது சிறப்பு.

பட்டேல் அணையில் இருந்து மீன் வளர்ப்பு, நீர்பாசனம் போன்ற தேவைகள் ஈடுகட்டப்பட்டு வந்தன. பட்டேலுக்கு சொந்தமாக 3 அணைகள் உள்ளதாகவும், அதில் இதுதான் பெரிதானது என்றும் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்தபோது அவர் அங்கு இல்லை என்பதால் உயிர் பிழைத்துள்ளார்.
அணை நீர் 2 கிராமங்களை சூறையாடியுள்ளது. மின் கம்பங்களை இழுத்துச் சென்றுள்ளதால், பல இடங்களில் மின்சாரம் இல்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பட்டேல் நிலை சிக்கலாகியுள்ளது. சட்டத்தின்பிடியில் அவர் சிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு பூக்களை ஏற்றுமதி செய்வதில் கென்யா முன்னணியில் உள்ளது. பட்டேலுக்கு சொந்தமாக 3500 ஏக்கரில் பூ விவசாய நிலம் உள்ளது. இந்த பூ பண்ணையின் பொது மேலாளர் வினோஜ் குமார் கூறுகையில், அணைக்கு மேலேயுள்ள வனப் பகுதியில் பெய்த மிக கடுமையான மழைதான் அணை உடைப்புக்கு காரணமாகிவிட்டது.
கடந்த இரு நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வந்தது. மரங்கள், கற்களை தண்ணீர் அடித்துக் கொண்டு அணைக்குள் தள்ளியது. இதனால் அணை உடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் கடுமையான வறட்சியை சந்தித்த கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, சோமாலியா, எதியோபியா மற்றும் உகாண்டா ஆகியவற்றில் கடந்த 2 மாதங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நூற்றுக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அணை உடைந்தபோது மக்கள் பலரும் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்ததால், அதன் சேத மதிப்பு அதிகமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?












Click it and Unblock the Notifications