அமானுஷ்யங்கள் நிறைந்த பெர்முடா முக்கோணத்தில் ஆபத்தான தீவு!!
பெர்முடா முக்கோணத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் தீவு ஒன்று உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
பஹாமாஸ்: பஹாமாஸ் நாட்டில் உள்ள பெர்முடா முக்கோணத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் திடீர் தீவு ஒன்று உருவாகியுள்ளது.
பெர்முடா முக்கோணம், சாத்தான் முக்கோணம் என்றழைக்கப்படுகிறது. இது பஹாமாஸில் வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு தளர்வாக வரையறுக்கப்பட்டப் பகுதி கடல் பகுதி போன்றதாகும்.
அவ்வழியாக செல்லும் நிறைய விமானங்களும், கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பீதி ஏற்படுத்தும் விஷயங்களுக்கு அமானுஷ்ய சக்தி அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.

முக்கோண பகுதி
பேரன்ஸ் கடல் பகுதியில் புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இந்த பெர்முடா முக்கோணம். உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது. இதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. சொகுசுக் கப்பல்கள் நிறைய உள்ளன.

திடீர் தீவு
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், 440,000 மைல்கள் பரப்பளவைக் கொண்ட பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சமீபத்தில் சிறிய தீவு ஒன்று உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சிறிய மணல் திட்டு போன்று இருந்தது. அது போக போக பிறை வடிவ தீவாக காட்சி அளிக்கின்றன.

ஷெல்லி என பெயர்
இந்த தீவில் ஏராளமான சங்குகள் உள்ளதால் இதற்கு ஷெல்லி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு மைல் நீளமும், 400 அடி அகலமும் கொண்ட தீவாகும். இங்கு சங்கு மற்றும் புகைப்படம் எடுக்க செல்வோர் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். அத்தனை ஆபத்து நிறைந்த பகுதியாகும்.

திமிங்கலமும் உண்டு
இந்த முக்கோணத்தில் பெரிய அளவிலான திமிங்கலங்கள் ஏராளமாக உள்ளதால் உள்ளூர் மக்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே ஆபத்துகள் நிறைந்த நிலையில் இந்த பெர்முடா முக்கோணம் உள்ளது. இதில் திடீர் தீவு வேறு உருவாகியுள்ளதால் ஆபத்துகள் இன்னும் ஏராளம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களுக்கு எச்சரிக்கை
மிகவும் வலிமையான நீரோட்டங்கள் முக்கிய பகுதியை மணல் திட்டு பகுதியிலிருந்து பிரிப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டுக்கும் இடையே உள்ள 50 கஜங்கள் (யார்டுகள்) ஆகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications