காஸாவில் இஸ்ரேல் உச்சகட்ட வெறியாட்டம்.. ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் உச்சகட்ட வெறியாட்டம் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் தரை வழித்தாக்குதலை நடத்தி வருகிறது. சனிக்கிழமை இரவு முதல் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே தரைவழி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

உச்சகட்ட வெறியாட்டம்
இதில் 18 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

உறுதி செய்த அதிபர்
குறிப்பாக ஒரே பகுதியை சேர்ந்த 60 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பாலஸ்தீன அதிபர் மகமுது அப்பாஸ் கூறுகையில், காஸாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷெஜய்யாவில் பெருமளவிலான உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

தாக்குதல் நீடிக்கும்- இஸ்ரேல்
ஆனால் காஸா மீதான தங்களது தாக்குதல் மேலும் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிணைக் கைதியாக இஸ்ரேல் வீரர்?
இதனிடையே இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை தாங்கள் உயிருடன் பிடித்துள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் அறிவித்தனர்.

உறுதிப்படுத்தாத இஸ்ரேல்
இந்த அறிவிப்பை வாழ்த்தும் விதமாக காஸா முழுவதும் துப்பாக்கி முழக்கம் எழுப்பப்பட்டது. ஆனால் தங்களது வீரர் ஒருவர் பிடிபட்டதை இஸ்ரேல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications