Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கண்ணே கூசுது"..காருக்குள் நண்பருடன் "உறவு" கொண்ட பெண்.. பப்ளிக்கில் நடந்த அசிங்கம்: கதறிய பிள்ளைகள்

Subscribe to Oneindia Tamil

பியூனஸ் அயர்ஸ்: தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில், ஒரு கன்றாவி சம்பவம் நடந்துள்ளது.. இந்த சம்பவம் குறித்து, "தி சன்" என்ற வெப்சைட் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

அர்ஜென்டினாவில், லா பிளாட்டா என்ற பகுதியில் வசித்து வருகிறார் அந்த பெண்.. 28 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இந்த பகுதியில், குழந்தைகள் விளையாடும் பூங்கா ஒன்று இருக்கிறது. எனவே, இந்த பூங்காவுக்கு, தன்னுடைய 2 குழந்தைகளையும் காரில் அழைத்துக் கொண்டு போயிருக்கிறார் அந்த பெண்.

Did mother of 2 child romance with her boy friend in the sight of childs and what happened

திக்குமுக்காடினார்: அந்த நேரம் பார்த்து, அவரது ஆண் நண்பர் ஒருவர் திடீரென வந்துவிட்டார்.. எதிர்பாராத விதமாக அந்த ஆண் நண்பரை சந்திக்க நேர்ந்துவிடவும், அந்த பெண் திக்குமுக்காடிப்போய்விட்டார்.. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள், திடீரென அந்த நண்பரை காருக்குள் இழுத்து சென்றுவிட்டார் அந்த பெண்.. காரை இழுத்து பூட்டியும் கொண்டார்.. அடுத்த சில நிமிடங்களில், காருக்குள்ளேயே அந்த நண்பருடன் உடலுறவிலும் ஈடுபட்டுள்ளார்...

இதனால் வெளியே நின்று கொண்டிருந்த அவரது பிள்ளைகளால், காருக்குள்ளே வர முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது.. தங்களையும் உள்ளே அனுமதிக்குமாறும், கார் கதவை திறக்குமாறும் அந்த பிள்ளைகள் கெஞ்ச ஆரம்பித்தனர்.. ஆனால், அந்த பெண் எதையுமே காதில் வாங்கவில்லை.. தொடர்ந்து அந்த இளம்பெண், அந்த ஆண் நண்பருடன் உறவில் ஈடுபட்டிருந்தார்.. ஒருகட்டத்தில் அந்த பிள்ளைகள் காருக்கு வெளியே நின்று அழ துவங்கிவிட்டன..

உடலுறவு: இதனால் அந்த பூங்காவில் இருந்தவர்கள், இதை கவனித்துவிட்டனர்.. அவர்களாலும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளனர்.. அந்த பூங்காவில் இருந்த நபர் ஒருவர், இந்த காட்சியை வீடியோவாக எடுத்து, சோஷியல் மீடியாவிலும் வெளியிட்டுவிட்டடார்.. அந்த வீடியோவில், குழந்தைகள் தவிப்பதை பார்த்து கொந்தளித்து போயுள்ளனர்.

பெற்றெடுத்த 2 பிள்ளைகளுமே பள்ளிக்குழந்தைகள்.. அவர்கள் முன்பாக பெற்ற தாய், உறவில் இருந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை தந்துவருகிறது.. சம்பந்தப்பட்ட பெண்ணை பல்வேறு தரப்பினர் கண்டித்து வருகிறார்கள்..

Did mother of 2 child romance with her boy friend in the sight of childs and what happened

இதில் என்ன ஒரு சங்கடம் என்றால், அந்த இளம்பெண்ணின் மகள் சற்று உயரமாக இருப்பாராம்.. அதனால், கார் கண்ணாடி வழியே உள்ளே நடந்த காட்சிகளையும் கண்ணாலேயே பார்த்துவிட்டார்.. அந்த குழந்தைக்கே, இந்த காட்சிகள் அப்பட்டமாக கண்ணாடி வழியாக தெரிந்திருக்கிறதென்றால், அங்கிருந்தவர்கள் எல்லாருமே இதை பார்த்துள்ளனர்..

அசிங்கம்: உடனடியாக போலீசாருக்கும் தகவல் தந்திருக்கிறார்கள்.. இவர்கள் தகவல் தெரிவித்து, போலீசார் அங்கு வந்து சேரும்வரை, அந்த ஜோடி காருக்குள்ளேயே பிஸியாக இருந்திருக்கிறது.. அதற்கு பிறகு, காரை திறந்து, 2 பேரையும் கைது செய்துள்ளனர்.. இப்போது அந்த 2 பிள்ளைகளும், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்களாம்.. என்னத்த சொல்றது??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+