இன்று அதிகாலை வானை பார்த்தீர்களா?: சந்திர கிரகணம் தெரிந்ததா?
சிட்னி: இன்று அதிகாலை சந்திர கிரகணம் ஏற்பட்டது. இது ஆஸ்திரேலியா, வடக்கு அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள், கிழக்கு ஆசியாவில் 15 நிமிடங்கள் தெரிந்துள்ளது.
இன்று அதிகாலை எழுந்தவுடன் வானை பார்த்தீர்களா? ஏன் என்றால் இன்று அதிகாலை சந்திர கிரகணம் ஏற்பட்டது. நிலா பூமியின் பின்னால் நகர்ந்து செல்கையில் பூமி அதன் மீது சூரிய ஒளி படாமல் தடுப்பது தான் சந்திர கிரகணம். பௌர்ணமி அன்று மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.
இந்நிலையில் இன்று காலை 5. 39 மணிக்கு துவங்கிய சந்திர கிரகணம் காலை 7.47 மணி வரை நீடித்தது. கிரகணம் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக ஏற்பட்டும் 15 நிமிடங்கள் மட்டுமே அது மக்களுக்கு தெரியும்படி நடந்துள்ளது.
#FullMoon #LunarEclipse Update is out! Eclipse inspires & energizes us with fullness & power https://t.co/fdtKjo1I1R pic.twitter.com/H4y6LzT79f
— The Power Path (@thepowerpathinc) March 23, 2016
இன்று காலை நிலவு வழக்கத்தை விட மங்கியிருந்தது. இந்த நிகழ்வு ஆஸ்திரேலியா, வடக்கு அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள், கிழக்கு ஆசியாவில் 15 நிமிடங்கள் தெரிந்துள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடல் பகுதி, நியூசிலாந்து, ஜப்பானிலும் கிரகணம் தெரிந்துள்ளது.
இன்று காலை நிலவு லேசான நீல நிறத்தில் இருந்தாலும் உலகின் பெரும்பாலான இடங்களில் அது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் எனிலும் பைனாகுலர் மூலம் பார்த்தால் சிறப்பாக தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications