பதற வைக்கும் வீடியோக்கள்.. சாலையில் உண்மையாக ஓடும் ரத்த வெள்ளம்.. சிரியாவின் நிலை என்ன?
சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த போரின் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் நிறைய படங்கள், வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. இது இதயத்தை உருக்கும் வகையில் இருக்கிறது.
|
எப்படி போடப்படுகிறது
சிரியாவில் மோசமான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த குண்டுகள் எப்படி பள்ளிகள், வீடுகள் இருக்கும் பகுதியில் சரியாக எறியப்படுகிறது என்று வீடியோ வெளியாகி இருக்கிறது.
|
சிரிப்பு
இந்த சிறுமியின் புகைப்படம் நேற்றில் இருந்து வைரலாக பரவி வருகிறது. இந்த குழந்தை தாய், தந்தை இழந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும் கேமரா பார்த்து சிரித்து இருக்கிறார்.
|
கண்ணீர்
அதேபோல் இந்த வீடியோவும் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சிரியா போரால் தன் குழந்தையை இழந்த தந்தை கண்ணீர் விடும் வீடியோ மனதை உருக்குகிறது.
|
நூர் மற்றும் அலா
நூர் மற்றும் அலா என்று இந்த இரண்டு சிறுவர்களும் போர் குறித்து பேசியுள்ளனர். சிரியாவில் அவர்களின் அந்த நாள் எப்படி கழிந்தது என்று கண்ணீர் விடும் அளவிற்கு பேசியுள்ளனர். இங்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்றுள்ளனர்.
|
ரத்த வெள்ளம்
இது சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கவுட்டா என்று பகுதியில் போர் காரணமாக சாலையில் ஓடும் ரத்தம் ஆகும். பார்க்கவே பயமுறுத்தும் அளவிற்கு இந்த வீடியோ இருக்கிறது.
|
குழந்தைகளின் சடலம்
இதில் குழந்தைகளின் சடலங்கள் எப்படி அடுக்கப்பட்டு இருக்கிறது என்று புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த போரில் இறந்த குழந்தைகள் எல்லோரும் வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த போரில் குழந்தைகள்தான் அதிகம் இறந்தார்கள் என்று கூறப்படுகிறது.
|
புதிது
இந்த சிறுமி பள்ளியில் இருக்கும் போது தாக்குதல் நடந்து இருக்கிறது. இவருடைய காலில் அடிப்பட்டு உள்ளது. ஆனாலும் என்னுடைய உடையை கிழிக்காதீர், அது புதியது, என்று கண்ணீர் விட்டு இருக்கிறார்.
|
குழந்தைகளே இல்லையா
இவர் ''உங்கள் ஊரில் குழந்தைகளே இல்லையா? உங்கள் குழந்தைகள் மீது இப்படித்தான் குண்டு போடுவீர்களா? குழந்தைகள் இறக்கிறார்கள், பெண்கள் இருக்கிறார்கள், என் அப்பா என்னுடன் இப்போது இல்லை, என்னால் என்ன சொல்ல முடியும். எங்களை நாங்கள் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டோம்'' என்று உருக்கமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications