இந்த பெண் டாக்டர் செய்த செயலைப் பாருங்கள்!
கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொண்ட பெண் டாக்டர் ஒருவர், பிரசவத்துக்குள்ளான பெண்ணின் அந்தரங்கப் பகுதியில் ஒரு கையை வைத்தபடி, இன்னொரு கையால் வி சிம்பல் காட்டி சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். அவரை தற்போது மருத்துவமனை நிர்வாகம் பணியிலிருந்து நீக்க விட்டது.
இந்த டாக்டரின் செயல் மிகவும் அநாகரீகமானது என்பதோடு, ஒட்டுமொத்த டாக்டர்களுக்கும் அவப் பெயரை உருவாக்கி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மலேசியாவின் ஜோஹார் மாகாணத்தில் உள்ள ஜோஹார் பஹ்ரு மருத்துவமனையில்தான் இந்த முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த டாக்டர் அப்பெண்ணின் அந்தரங்கப் பகுதியில் ஒரு கையை வைத்துள்ளார். இன்னொரு கையால் வெற்றியைக் குறிப்பிடும் வி சிம்பலைக் காட்டுகிறார். இந்தப் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளது. இந்தப் படத்தை எடுத்தவர் யார் என்று தெரியவில்லை. அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவம் உலக அளவில் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். சம்பந்தப்பட்ட பெண் டாக்டர் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மலேசிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் செர்பி சுப்ரா கூறியுள்ளார். தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications