என்னாது! கொரோனாவை விரட்ட டான்சானியாவின் மூலிகை மருந்தா.. அதெல்லாம் நம்பாதீங்க மக்களே!
டான்சானியா: டான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூலிகை மருந்து கோவிடால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு குணப்படுத்தும் என்றும் இதை டான்சானியா அரசு அனுமதித்துள்ளதாகவும் பல்வேறு செய்திகள் சமூகவலைதளங்களில் வந்தன. ஆனால் அவை தவறான தகவல்களாகும்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் எதை தின்றால் பித்தம் தெளியும் என ஆராய்ந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பாதிப்பும் அதிகரித்து வருவதால் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில் டான்சானியாவில் ஒரு மூலிகை மருந்து கொரோனா பாதிப்பை குணப்படுத்தும் என்றும் அந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

டான்சானியா
பேஸ்புக்கில் டான்சானியன் அதிபர் ஜான் மகுஃபூலி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் யும்மி ஆலி ம்வாலிமு ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய ஒரு தகவல் வந்துள்ளது. அதில் கோவிட் 19 நோயை குணப்படுத்தும் மருந்தை டான்சானியா அரசு கண்டுபிடித்துள்ளது. அதன் செயல்பாடு நன்றாக இருக்கிறது.

நோயாளி
அந்த மருந்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்க அந்நாட்டு சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது. நோயை குணப்படுத்தும் நாடு டான்சானியா என அந்த பேஸ்புக் பதிவில் பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியா டுடே நடத்திய ஆய்வில் அந்த தகவல் பொய்யானது என தெரியவந்துள்ளது.

கோவிடால் மருந்து
கோவிடால் மருந்தானது இதுவரை எந்த மருத்துவ ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை என்றும் அது கொரோனாவை குணப்படுத்தும் என்ற எந்தவிதமான விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் தெரியவந்தது. டான்சானியன் அரசு அதுபோன்ற எந்த ஒரு மருந்துக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மருந்தானது டான்சானியா தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள ஆய்வாளர் ஹேமிஸ் மலிபோவால் கண்டறியப்பட்டது.

சுகாதாரத் துறை அமைச்சகம்
கடந்த மே 11-ஆம் தேதி டான்சானியா பிராட்காஸ்டிங் சர்வீஸ் சார்பில் நடத்தப்பட்ட கண்காட்சியில் இந்த கோவிடால் மருந்து பார்வைக்கு வைக்கப்பட்டது. இதன் பிறகுதான் கொரோனா வைரஸுக்கு கண்டுபிடிக்கப்பட்ட மருந்து கோவிடால் என்றும் இதை டான்சானியன் சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்ததாகவும் ஒரு வதந்தி பரவி வந்தது. எனவே கோவிடால் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் மூலிகை என்பது தவறான தகவல். இது போன்ற போலி செய்திகளை பரப்பாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications