அமெரிக்காவில் வசிக்கும் புலம் பெயர்ந்தோரை நச்சுப்பாம்பு என்று வர்ணித்த டிரம்ப்!
வாஷிங்டன்: முஸ்லீம்கள் அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கக் கூடாது என்று விஷமத்தனமாக பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட டொனால்ட் டிரம்ப், தற்போது பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியுள்ளவர்களை நச்சுப் பாம்புகள் என்று வர்ணித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் முன்னணியில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் குடியேறி வசிக்கும் பிற நாட்டவர்கள் மீது தொடர்ந்து விஷத்தைக் கக்கி வருகிறார் டிரம்ப்.
சமீபத்தில் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்கிடமான கருத்தை வெளியிட்டிருந்தார். வெளிநாட்டு முஸ்லீம்கள் அமெரிக்காவில் குடியேற விடக் கூடாது. அவர்களை அமெரிக்காவுக்குள்ளேயே நுழைய அனுமதிக்கக் கூடாது என்று அவர் கூறியிருந்தார்.

நச்சுப் பாம்புகள்
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பிற நாட்டவர்களை நச்சுப் பாம்புகளுடன் ஒப்பிட்டுப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் டிரம்ப்.

பாம்புப் பாட்டு
யங்ஸ்டவுன் விமான நிலையத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஏஎல் வில்சன் எழுதிய தி ஸ்னேக் என்ற நூலிலிருந்து சில வரிகளைப் படித்தார்.

காப்பாற்றியவரைக் கடித்த பாம்பு
அந்தக் கதையில், உடம்புக்கு முடியாமல் போன பாம்பு ஒன்றை ஒரு பெண் தனது வீட்டுக்குக் கொண்டு சென்று வளர்க்கிறாராம். ஆனால் குணமடைந்ததும் அந்தப் பாம்பு அப்பெண்ணையைக் கடித்து விட்டதாம்.

கவனமாக இருக்க வேண்டும்
இந்தக் கதையைக கூறி டிரம்ப், எனவே நமது வீட்டுக்குள் (அமெரிக்காவுக்குள்) யாரை விடுவது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும், கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

சுவர் எழுப்புவேன்
வெளிநாட்டினர் நமது நாட்டுக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா - மெக்சிகோ இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுவர் எழுப்புவேன். இதன் மூலம் மத்திய அமெரிக்கர்கள் உள்ளேவர முடியாது.

சிரியாவிலும்
அதேபோல சிரியாவிலும் ஒரு சுவர் எழுப்பப்படும். அதன் மூலம் ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்படுவார்கள் என்றார் டிரம்ப்.

இன்றைய வாக்கெடுப்பில்
டிரம்ப் இன்று ஓஹையோ, புளோரிடா, இல்லினாய்ஸ், மிசவுரி, வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் வாக்கெடுப்பில் கலந்து கொள்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அவர் உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications