அமெரிக்காவில் வசிக்கும் புலம் பெயர்ந்தோரை நச்சுப்பாம்பு என்று வர்ணித்த டிரம்ப்!
வாஷிங்டன்: முஸ்லீம்கள் அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கக் கூடாது என்று விஷமத்தனமாக பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட டொனால்ட் டிரம்ப், தற்போது பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியுள்ளவர்களை நச்சுப் பாம்புகள் என்று வர்ணித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் முன்னணியில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் குடியேறி வசிக்கும் பிற நாட்டவர்கள் மீது தொடர்ந்து விஷத்தைக் கக்கி வருகிறார் டிரம்ப்.
சமீபத்தில் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்கிடமான கருத்தை வெளியிட்டிருந்தார். வெளிநாட்டு முஸ்லீம்கள் அமெரிக்காவில் குடியேற விடக் கூடாது. அவர்களை அமெரிக்காவுக்குள்ளேயே நுழைய அனுமதிக்கக் கூடாது என்று அவர் கூறியிருந்தார்.

நச்சுப் பாம்புகள்
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பிற நாட்டவர்களை நச்சுப் பாம்புகளுடன் ஒப்பிட்டுப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் டிரம்ப்.

பாம்புப் பாட்டு
யங்ஸ்டவுன் விமான நிலையத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஏஎல் வில்சன் எழுதிய தி ஸ்னேக் என்ற நூலிலிருந்து சில வரிகளைப் படித்தார்.

காப்பாற்றியவரைக் கடித்த பாம்பு
அந்தக் கதையில், உடம்புக்கு முடியாமல் போன பாம்பு ஒன்றை ஒரு பெண் தனது வீட்டுக்குக் கொண்டு சென்று வளர்க்கிறாராம். ஆனால் குணமடைந்ததும் அந்தப் பாம்பு அப்பெண்ணையைக் கடித்து விட்டதாம்.

கவனமாக இருக்க வேண்டும்
இந்தக் கதையைக கூறி டிரம்ப், எனவே நமது வீட்டுக்குள் (அமெரிக்காவுக்குள்) யாரை விடுவது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும், கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

சுவர் எழுப்புவேன்
வெளிநாட்டினர் நமது நாட்டுக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா - மெக்சிகோ இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுவர் எழுப்புவேன். இதன் மூலம் மத்திய அமெரிக்கர்கள் உள்ளேவர முடியாது.

சிரியாவிலும்
அதேபோல சிரியாவிலும் ஒரு சுவர் எழுப்பப்படும். அதன் மூலம் ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்படுவார்கள் என்றார் டிரம்ப்.

இன்றைய வாக்கெடுப்பில்
டிரம்ப் இன்று ஓஹையோ, புளோரிடா, இல்லினாய்ஸ், மிசவுரி, வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் வாக்கெடுப்பில் கலந்து கொள்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அவர் உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications