ஆன்டனி பவுசி ஒரு முட்டாள்.. அவர் அமெரிக்காவை பிடித்த பேரிடர்.. வாய்க்கு வந்தபடி பேசிய டிரம்ப்
லாஸ்வேகாஸ்: கொரோனா வைரஸ் அதிரடி படையின் உறுப்பினர் டாக்டர் ஆன்டனி பவுசியும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் முட்டாள்கள் என்றும் பவுசி அமெரிக்காவின் பேரிடர் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பும் அவரை எதிர்த்து ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவை அதிபர் டொனால்ட் டிரம்ப் சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை முன்னிறுத்தியே ஜோ பிடன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

டொனால்ட் டிரம்ப்
இந்த நிலையில் லாஸ்வேகாஸில் இன்றைய தினம் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 2.15 லட்சம் அமெரிக்கர்கள் இதுவரை இறந்துள்ளார்கள். நோய் எதிர்ப்பு சக்தி நிபுணரும் டாக்டருமான ஆன்டனி பவுசியும் (இவர் வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் அதிரடி படையின் உறுப்பினரும் ஆவார்) சுகாதாரத் துறை அதிகாரிகளும் முட்டாள்கள் ஆவர்.

நாட்டை மீட்க
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. வருங்காலங்களில் கொரோனா பாதிப்பு மேலும் மோசமாகும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அதனால் சுகாதார பேரிடரிலிருந்து நாட்டை மீட்க உறுதியளிக்கிறேன்.

சுகாதாரத் துறை
பவுசி மட்டும் இன்னும் சுகாதாரத் துறையின் பொறுப்பாளராக இருந்திருந்தால் அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பலியாகியிருக்கக் கூடும். மக்கள் கொரோனாவால் அசதி அடைந்துள்ளார்கள். மக்கள் பவுசி மற்றும் மற்ற சுகாதாரத் துறை முட்டாள்களின் பெயரை கேட்டு சோர்வடைந்துவிட்டார்கள்.

குற்றச்சாட்டு
பவுசி நல்லவர்தான். அவர் இங்கு 500 ஆண்டுகளாக இருக்கிறார். அவர் பேச்சை கேட்டால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். நாம் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற போகிறோம் என்றார். கொரோனா வைரஸ் வந்த காலத்தில் டிரம்ப் யாருடைய பேச்சையும் கேட்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications