இன்று சரணடையும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்.. என்னது 20 ஆண்டுகள் சிறையா? என்ன நடக்கப்போகிறது?

Subscribe to Oneindia Tamil

ஜார்ஜியா: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அட்லாண்டா சிறையில் சரணடைய இருப்பதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

அமெரிக்க அதிபராக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். எனினும், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தேர்தல் வெற்றியை ஜோ பைடன் தன்னிடமிருந்து அபகரித்துக்கொண்டதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

Donald Trump to surrender today: What happened?

தேர்தல் முடிவுகளுக்கு சான்றளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கடந்த 2021 ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில் உறுதி செய்தது.

ஜார்ஜியா மாகாணத் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜார்ஜியா நீதிமன்றமும் உறுதி செய்தது. தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 19 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனையை எதிர்கொண்டுள்ள முதல் முன்னாள் அதிபர் டிரம்ப். டிரம்ப் உள்ளிட்ட 19 பேரும் வெள்ளிக்கிழமைக்குள் சரணடைய உத்தரவிடப்பட்டது.

டொனால்ட் டிரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் ருடால்ப் கியுலியானி புதன்கிழமை அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். முன்னாள் பெடரல் வக்கீலும் நியூயார்க் நகர மேயருமான கியுலியானி, 150,000 அமெரிக்க டாலர்கள் பிணையாகச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பெயிலில் விடுவிக்கப்பட்டார்.

2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கும் டிரம்ப், "நான் வியாழன் அன்று ஜார்ஜியா நீதிமன்றத்தில் சரணடைவேன்" என்று தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகள் உறுதியானால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதும் கேள்விக்குறியாகி விடும்.

எனினும், 2,00,000 அமெரிக்க டாலர்கள் பிணை பத்திரம் செலுத்த ஒப்புக்கொண்டால் டிரம்ப் ஜாமீனில் விடுவிக்கப்படுவார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அட்லாண்டா சிறையில் சரணடைய இருப்பதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+