இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மின் விநியோக கட்டமைப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக நாடு முழுவதும் கடும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய சுமார் 12 மணி நேரம் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.34 மணியளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்னழுத்தத்தில் ஏற்பட்ட சீரற்ற தன்மையே இந்த மின்வெட்டுக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மின்வெட்டு காரணமாக கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தவித்து வருகின்றன. இது குறித்து அந்நாட்டின் மின்துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் ஜியோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது ஒரு பெரிய பிரச்னை இல்லை" என்று கூறியுள்ளார்.

மேலும், "இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற இடங்களிலும் நிலைமை சீர் செய்யப்படும்" என்று கூறியுள்ளார். குட்டூவில் இருந்து குவெட்டாவிற்கு செல்லும் இரண்டு டிரான்ஸ்மிஷன் லைன்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் குவெட்டா உட்பட பலுசிஸ்தானின் 22 மாவட்டங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு எப்போது சீர் செய்யப்படும் என்றும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இவ்வாறு மின் வெட்டு ஏற்படுவது ஒன்றும் பாகிஸ்தானில் புதியது கிடையாது. ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் இதே போல மிகப்பெரிய அளவுக்கு மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில் இது இரண்டாவது மின்வெட்டு சம்பவமாகும். ஜெனரேட்டர்கள் ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பதால் மற்ற அரசு மருத்துவமனைகள் மின்வெட்டால் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான பெஷாவரின் லேடி ரீடிங் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிம் கூறுகையில்,

"அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆய்வகங்களுக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கும் அளவுக்கு பேக் அப் ஜெனரேட்டர்கள் இருப்பதாக" கூறியுள்ளார். பாகிஸ்தானின் மின்சாரத்துறை தற்போது பெரும் கடனில் சிக்கியிருக்கிறது. மின்துறையின் உள் கட்டமைப்புகள் மற்றும் இணைப்புகளில் அதிக அளவு முதலீடு இல்லாத காரணத்தினால் மின் கட்டமைப்பு சரியாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால்தான் இம்மாதிரியான பிரச்னைகள் அதிகம் எழுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications