மாஸ்கோ வந்த நெதர்லாந்து அரசர் மற்றும் ராணியை தக்காளியால் தாக்கிய தொண்டர்கள்

ரஷ்யா மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கிடையே உள்ள வரலாற்று உறவுகளைக் கொண்டாடும் நோக்கிலே நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்ஸாண்டரும், அவரது மனைவி ராணி மேக்சிமாவும் நேற்று மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்டனர்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத வேளையில், ரஷ்யாவில் எதிர்க்கட்சியாக விளங்கும் தேசிய போல்ஷெவிக் கட்சியின் செயல்தொண்டர்கள் இருவர் அரசர் மற்றும் ராணி மீது தக்காளிகளை வீசித் தாக்கினர்.
தேசிய பொல்ஷெவிக் கட்சி ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ள கட்சியாகும். அக்கட்சியின் தலைவர் எடோர்ட் லிமொனோவ் இன்று இந்த எதிர்ப்பு குறித்த விளக்கத்தினை அளித்துள்ளார். அதில், ‘நெதர்லாந்து நாட்டின் அயல்நாட்டவர்களை வெளியேற்றும் மையம் ஒன்றில் இருந்த போல்ஷெவிக் கட்சியின் உறுப்பினரான அலெக்சாண்டர் டல்மடோவ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் இதுகுறித்து நெதர்லாந்து அரசு தகுந்தமுறையில் விசாரணை நடத்தவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து மக்களின் கவனத்தைத் திருப்பவே இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, நெதர்லாந்து நாட்டுக் கொடியுடன் ரஷ்யக் கடற்பகுதியில் வந்த பசுமை இயக்கத்தினரை அந்நாடு கைது செய்ததுவும், மேலும் மற்ற பிரச்சினைகளும் நிலவும் நிலையில் அரச குடும்பத்தினர் மாஸ்கோவில் தாக்கப் பட்ட சம்பவம் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications