Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவு.. சுனாமி வார்னிங் இல்லை

Subscribe to Oneindia Tamil

இந்தோனேசியா: இந்தோனேசியா சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 என பதிவாகி உள்ளது.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா இருப்பதே இதற்கு காரணமாகும்.

இந்நிலையில், இந்தோனேசியா மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள புக்கிட்டிங்கி பகுதியில் இன்று அதிகாலை 1.39 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக அருகே உள்ள கிசார் தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ஆட்டம் கண்டன. வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டன.

 ஓடிய மக்கள்

ஓடிய மக்கள்

இதனால் பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து கண்விழித்து சத்தம்போட்டு கொண்டு வீடுகளை விட்டு ஓடினர். சிலர் தங்களது உடைமைகளோடு வீடுகளில் இருந்து வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். மேற்கு பாசமான் மாவட்ட மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

 ரிக்டரில் 6.2

ரிக்டரில் 6.2

நிலநடுக்கத்தில் பாதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதுபற்றி அமெரிக்க புவியியல் மையம் கூறுகையில், ‛‛புக்கிட்டிங்கி வடமேற்கு பகுதியில் 66 கிலோமீட்டர் தொலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகி இருந்தது'' என கூறியுள்ளது.

 சுனாமி ஆபத்து இல்லை

சுனாமி ஆபத்து இல்லை

இதுகுறித்து இந்தோனேசியாவில் உள்ள வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‛‛இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை. இருப்பினும் நிலநடுக்கம் பற்றி கவனிக்கப்பட்டு வருகிறது'' என்றார். இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. பெரும்பாலான நிலநடுக்கங்கள் அதிர்ஷ்டவசமாக பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. சில நிலநடுக்கங்கள் உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன.

 இதற்கு முன் எப்படி

இதற்கு முன் எப்படி

கடந்த ஆண்டு ஜனவரியில் 6.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மேற்கு சுலவாசி மகாணத்தில் 105 பேர் இறந்தனர். 6,500 பேர் காயமடைந்திருந்தனர். மேலும் கடந்த 2004ம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தான் சுனாமி உருவானதாக கூறப்படுகிறது. அப்போதைய சுனாமியின் போது இந்தியா உள்பட 12 நாடுகளில் பல்வேறு இடங்களில் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+