For Daily Alerts
Just In
இந்தோனேசியாவில் பயங்கர நிலஅதிர்வு: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
ஜகார்த்தா: கிழக்கு இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 அலகாகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள பாபர் தீவு அருகே கடலுக்கடியில் 67 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாகவும், சுமார் 25 வினாடி உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் அங்குள்ள சவும்லக்கி எனும் பகுதியில் உணரப்பட்டது.
மேலும், சுனாமி வர வாய்ப்பில்லை எனவும், இந்த நிலஅதிர்வால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலஅதிர்வால் ஏற்பட்டுள்ள உயிர் சேத விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை
இந்தோனேசியா நிலநடுக்க அபாயமிக்க பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
Comments
English summary
6.1 magnitude earthquake hits eastern Indonesia
Story first published: Saturday, November 21, 2015, 19:36 [IST]